Monday, September 27, 2010

பொய் கேள்வியும் பொய் பதிலும்

தமிழன் ஒருவன்
ஆர்வமாய் என்
சாதியை கேட்டான்.

'தமிழன்' என்றேன்
நான்.

தமிழன் என்பது
சகலர்க்கும் தெரிந்த மெய்
சாதியை சொல்
என்றான் அவன்

'முதலியார்' என்றதும்
முழு சம்மதமாய் -
ஓராண்டு கழித்து
ஓடிவந்து கேட்டான்
'நீங்கள் வன்னியராமே!'

2 comments:

Hariharan said...

superb!

Praveenkumar said...

நல்லாயிருக்குங்க..