Monday, May 23, 2011

கலைஞரின் கபடநாடகமும் - நீலிக்கண்ணீரும்..!


ஸ்பெக்ட்ரம் வெளிவந்து அதற்கு காரணமாக இருந்த தொலைதொடர்பு துறை அமைச்சர் ராஜா கைது செய்யப்பட்ட போது 'இது திராவிடர்கள் மீது ஆரியர்கள் தொடுத்த போர்' என்றார் கருணாநிதி. பின்பு 'அவர் ஒரு தலித் என்பதால் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

மீண்டும் '1 .76 லட்சம் கோடி ரூபாயை ஊழலை ஒருவராலேயே செய்திருக்க முடியாது. ஒருவரை கைது செய்ததாலேயே அவர் குற்றவாளி ஆகிவிட முடியாது.பல நல்ல திட்டங்களை அவர் கொண்டு வந்த காரணத்தால் பொறாமை பிடித்த சிலர் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்' என்றார்.

சி.பி..கோர்ட் மூலம் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டு சிறையிலும் அடைத்தாகிவிட்டது.அவருக்காக வாதாடின வக்கீல் ராம்ஜெத் மலானி.பிஜேபி யை சேர்ந்தவர்.

ஒரு காலத்தில் பா..வை பற்றி, 'பண்டார பரதேசிகள் எல்லாம் இந்த நாட்டை ஆளத் துடிக்கின்றனர்'என்று கூறியவர் தான் இன்று அதே பண்டார பரதேசிகளில் ஒருவராகிய மூத்த கிரிமினல் வக்கீல் ஒருவரை கனிமொழிக்காக வாதாட வைத்துள்ளனர்.

கனிமொழி கைது செய்யப்பட்ட பிறகு 'உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் அவள் செய்யாத தவறுக்காக சிறை சென்றால் உங்கள் மனம் எந்த அளவிற்கு வேதனை படுமோ அந்த நிலையில் இருக்கிறேன்' என்கிறார்.

அய்யா...உங்களுக்கு மனசாட்சி என்பது ஒரு இருக்கின்றதா? தான் செய்த தவறை காலம் தாழ்த்தி கூட இன்னும் உணராத போது என்னவென்று சொல்வது.

ஒரு சம்பவத்தை மட்டும் நினைத்து பாருங்கள்.ஒரு வயதான முதியவள் , சிகிச்சைக்காக தானே தமிழ்நாட்டிற்கு வந்திறங்கினார்.கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தன் பதவி,மகன்களின் பதவிக்காகவே அந்த அம்மையாரை மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பியதை நினைத்து பாருங்கள்.நீங்களும் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்துகொண்டிருக்கிறீர்கள்.அந்த முதியவள் எத்தகைய மன உளைச்சலில் திரும்பி போயிருப்பாள்.அந்த பாவமே உங்களுக்கு சரியான தண்டனைகளை கொடுக்கும்.

இத்தனை ஊழல்கள் என்று கேட்டால் 'முந்தய ஆட்சியில் நடக்காததா?' என்றும்,
மின்சாரம் பற்றி கேட்டால் 'வட மாநிலங்கள் எல்லாம் இருளில் தான் மூழ்கி இருக்கிறது' என்று என்ன சர்வாதிகாரமான பதில்கள்.

லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவிப்பதை வேடிக்கை பார்த்த,கொலைகார ராஜபக்ஷேவை கம்பளம் விரித்து வரவேற்ற ஒரு சர்வாதிகார கொடுங்கோலனுக்கு சமம் நீங்கள்.

தன் மகள் சிறை சென்றதற்கு இந்த குதி குதிக்கிறார்.

தேர்தல் முடிவு வந்ததும் ஸ்டாலினிடம் சொன்னாராம் 'கனிமொழிய மட்டும் விட்டுடாதப்பா...' என்று.

அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு என்பார்கள்.

Saturday, May 7, 2011

கனவுலகில் ஒரு பயணம்..




தினமும் காலையில் உணவோடு பேருந்தில் சிக்கித் திணறி, அலுவலகம் சென்று செயற்கையான மனிதத்தோடு, விருப்பமில்லாத வேலையை தொடர்ந்து, மீண்டும் இரவில் ஒரு பயணம், வீடு, உணவு, உறக்கம், வேலை... இந்த பைத்தியக்கார வாழ்க்கைமுறையை கண்டு வாழ்கை என்பது இவ்வளவு குறுகிய வட்டமா என்று நாளுக்கு நாள் எரிச்சலோடு முடிகிறது. ஞாயிறுகளை தூங்கிக்கழித்தும், திருவிழாக்களில் சிறிது மகிழ்ந்தாலும் மனதில் உள்ள வெறுமை வேதனையானது.

இவற்றை தவிர நம் வாழ்கை முறையில் மாற்றம் இல்லை. முடிந்தால் கொடைகானலுக்கும், ஊட்டிக்கும் சுற்றுலா செல்வோம்.


கண்களை மூடி மனதை விரித்துப்பாருங்கள். 65000 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய நில உலகம். பூமியை போல பத்து லட்சம் மடங்கு பெரிய சூரியன். அதையும் தாண்டி போனால், சூரியன் போல பல லட்சம் மடங்கு பெரிய பெரிய சூரியன்கள் லட்சக்கணக்காக.. அவையெல்லாம் ஒன்று சேர்ந்த நட்சத்திர மண்டலங்கள். அவை பலகோடிகள் சேர்ந்த தொகுதிகள், கொத்தியக்கங்கள்..... இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில்.

என்னால் இந்தளவுக்கு போகமுடியாவிட்டாலும் சூரியனை பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந்த வழியில் என் பயணத்தை தொடர்ந்து செல்ல ஆசை.

சமீப நாட்களாக ஒரு எண்ணம். இந்த எந்திர வாழ்கையை விட்டு விட்டு எங்காவது ஓடிப்போய்விட வேண்டும். எங்காவது என்றால் 'into the wild' என்றொரு படம். அதன் நாயகன் போல. வீட்டை விட்டு காட்டை நோக்கி பயணப்பட்டு விட ஆசை. அந்த பயணத்தில் என்னோடு, என் எண்ணங்களோடு, என் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கும் நண்பர்களோடு பயணப்பட ஆசை. கையில் ஒரு பைசா இல்லாமல், அலைபேசி, நகை நட்டு, என எல்லாவற்றையும் துறந்துவிட்டு காட்டு விலங்குகள் போல், மனித விலங்காக ஒரு அடர்ந்த கானகத்தில் ஒரு நாள் வாழ்க்கையாவது வாழ ஆசை.

இப்படி நான் தினமும் நிகழாத ஒன்றை கற்பனையிலாவது சென்று பார்க்க ஆசைபடுவேன். இது தொடர்ந்ததாலோ என்னமோ ஒரு நாள் கனவாகவே மலர்ந்தது. எழுந்ததும் கலைந்துவிடும் கனவுக்கு மத்தியில் இந்த கனவு கலையவில்லை. இன்னமும் என் நினைவில் ஊஞ்சலாடுகிறது.

கனவில் நான் ஒரு அடர்ந்த கானகத்தில் அங்கிருக்கும் மரங்களை கொண்டு ஒரு குடிசை போட்டு ஓரிடத்தில் தங்கியிருக்கிறேன். எங்கும் சர்வ அமைதி. வண்டுகளின் ரீங்காரமும், சில காட்டு விலங்குகளின் ஓசையை தவிர. காட்டுச் செடிகளிக்கு நடுவே நான் நடந்து செல்கிறேன். அதன் இலைகளில் இருக்கும் பனித்துளிகளை முகத்தில் அடித்துக்கொண்டு நடந்து கொண்டே இருக்கிறேன். என் மனதில் பயம் இல்லை. காட்டுவிலங்குகள் பற்றிய பயம் இல்லை. இருட்டை கண்டு அச்சம் இல்லை. அங்கிருக்கும் அருவிகளில் குளித்து ஆனந்தக் கூத்தாடுகிறேன். அந்த கானகத்தில் எத்தனையோ வண்ணங்களில் வித விதமான பறவைகள் கண்டு வியக்கிறேன். மான்களும், குரங்குகளும், பெயர் தெரியாத விலங்கினங்களும் என்னை சுற்றி விநோதமாக என்னை பார்க்கின்றன. ஆனால் அவற்றின் கண்களில் குரூரம் இல்லை. அவை நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் என் பின்னாலேயே வருகின்றன. நான் ஒரு குட்டி புள்ளி மானை கையில் தூக்கிக் கொண்டு என் குடிசைக்கு வருகிறேன். பசிக்கும் போது அங்கிருக்கும் கோரை புற்களை, ஏதேதோ கிழங்குகளை பிரியமாக சாப்பிடுகிறேன்.



அப்போது என் குடிசையை சுற்றி நான்கைந்து காட்டு யானைகள். ஆனால் எனக்கு ஆச்சர்யம்..!! நான் கொஞ்சமும் பயப்படாமல் ஒரு யானையின் அருகில் சென்று அதன் தும்பி்க்கையில் ஒரு கிழங்கை கொடுத்து தடவி விடுகிறேன். அதன் காது மடல்கள் எனக்கு எட்டவில்லை. குதித்து குதித்து தொட முயற்சிக்கிறேன். சிங்கமும், புலியும் என் அன்பிற்கு கட்டுப்படுகின்றன.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்..

எல்லாவிலங்குகளும் அன்பிற்கு கட்டுப்படுகின்றன. என் குடிசையை சுற்றி சர்வலோகம். என் மனம் அளவில்லாத மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. வாழ்கையின் நிறைவை, மகிழ்ச்சியை அடைந்துவிட்டதாக ஒரு ஆனந்தம்.

Monday, May 2, 2011

தங்கபாலு காமெடி

‘நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும்’ என, சினிமா டயலாக் சொல்வது போல் பேட்டியளித்துள்ளார் தங்கபாலு.தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுவின் காமெடி பேச்சை கேட்ட தமிழக மக்கள் தற்போது தேர்தல் முடிந்தபின் இவருடைய காமெடியை ரசிக்கின்றனர்.

கொல்லைப்புறமாக வந்து எம்.எல்.ஏ.சீட்டை பெற்ற தங்கபாலு , இவ்வளவு வீராவேசமாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வளவு செல்வாக்குள்ள இந்த நாயன்மார்கள் ,அறிவாலயத்தை ஏன் வலம்வந்தனர்?அந்தளவு செல்வாக்குள்ளோர் என்ன செய்திருக்க வேண்டும்?

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் சீமான் போன்றோரது தமிழ் அமைப்புகள் ,இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்த போது இவர் அறிக்கை விட்டிருந்தால் , தமிழகம் எரிந்ததா இல்லையா என தெரிந்திருக்கும்.

மீனவர்கள் தொடர்ச்சியாக கொல்லப்படும் போதெல்லாம் அமைதியாக அறிவாலயத்தை வலம் வந்தவர் இப்போது திடீர் ஞானோதயமாக மீனவர்கள் பிரச்சனைக்காக இலங்கை தூதரகத்தை இவர் முற்றுகையிடுவதை யாரும் நம்பத் தயாராக இல்லை.பதவியை காப்பாற்ற அவர் போடும் நாடகம் என்பதை அரசியல் அறியாதவர்களும் அறிவர்.

கருணாநிதியுடன் சேர்ந்த தோஷத்தால்,போராட்டம் நடத்துவது,ராஜினாமா நாடகம் அரேங்கேற்றுவது போல்,இவரும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட அதே நேரத்தில் வாசன்,இப்பிரச்சனை குறித்து டில்லியில் சோனியாவை சந்தித்ததே இதற்கு காரணம் .

மீனவர்கள் ஏற்கனவே ரத்தக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் தன் சுயநலத்திற்காகவும்,பதவி சுகத்துக்காகவும் மீனவர்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல் இவர் நீலிக்கண்ணீர் வடிப்பதை மீனவர்கள் கண்டிப்பாக நம்ப மாட்டார்கள்.

மத்தியில் இவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தான் ஆள்கிறது.அவர்கள் நினைத்தால் மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கலாம் என்றிருக்கும் போது இவர் டில்லி சென்று சோனியா இல்லத்தை முற்றுகையிட்டிருக்க வேண்டுமே ஒழிய, இலங்கை தூதரகத்தை அல்ல.