Monday, September 27, 2010

பசி நல்லிணக்கம்


பல கடவுளை
நம்பி
பயனில்லை என
வெம்பி

ஒரே ஏசுவை
நம்பி

தன் பெயரை
மாற்றிக்கொண்டாள் சரஸ்வதி

நேற்று
அப்துல் காதர் தந்த
ஆயிரம் கடனை
அடைப்பதற்காக

முன்னூறு ரூபாய்
அதிகமாய் உள்ள
முனுசாமி கம்பெனியில்
சேர்ந்து

வெள்ளிக்கிழமை தோறும்
திருப்பதி ஆண்டவருக்குத்
தீபம் காட்டும் அவளிடம்

''மத நல்லிணக்கம்
தெரியுமா'' என்றேன்

அது
''பசியை விடவும்
பெரியதா'' என்றாள்.

--ரவிதாசன்.

1 comment:

Praveenkumar said...

கவிதை பகிர்வுகள் அருமை தோழி..! ரவிதாசன் உண்மையில் சிறந்த கவிதாசன்.