Friday, September 10, 2010

கனவு



ஜீவா காந்தம்: உடலில் உள்ள உயிர் சக்தி துகள்களின் விரைவான சுழற்சியினால் எழும் அலைகளின் பெயர் ஜீவகாந்தம்.

உடலில் உள்ள உயிர் சக்தி துகள்களில் இருந்து வெளியாகும் ஜீவகாந்த அலைகள் அனைத்தும் சுழன்றுகொண்டே இருக்கின்றன. பொதுவாக எந்த ஆற்றல் சுழற்சி பெற்றாலும், திண்மை உடைய பகுதி மத்தியில் போய் சேர்வதும், லேசான பகுதி புறத்தே போய் சேர்வதும் ' துல்லிய சமதளச் சீர்மை'. இந்த இயல்பின் படி ஜீவ காந்தத்தின் பெரும் பகுதி உடலின் மையப்பகுதிக்கு வந்து சேருகிறது. இந்த மையப் பகுதியே 'கருமையம் அல்லது ஆன்மா' என்று அழைக்கப்படுகிறது.

ஜீவகாந்தம் தன்மாற்றம் பெற்று செலவாகின்ற இடங்கள் பல. அவற்றில் பஞ்சேந்திரியமும் மனமும்(எண்ணமும்) அடங்கும். இந்த உலகில் தோன்றிய முதல் உயிரினத்தில் இருந்து இன்று வரை நாம் (அ) நம் முன்னோர்கள் ஆற்றிய செயல்கள் அனைத்துமே இந்த கருமையத்தில் பதிவாக பதிந்துள்ளன. இவையே அவ்வப்போது எண்ணகளாகி செயல்களாக மலர்கின்றது.

மனிதன் துங்கும் போது மன இயக்க செயல் அல்லது எண்ண ஓட்டங்கள் முழுமையாக நின்று போகாமல் சிறிய அளவில் ஏற்படுகின்ற காந்த கசிவு மின் கசிவாகி மூலையில் செயல் படும்போது கனவுகள் தோன்றுகின்றன. அதாவது கருமையத்தில் உள்ள பதிவுகள் எண்ணங்களாக , செயலார்வமாக மலர்ச்சி பெற்று விழிப்பில் (பகலில்) இருக்கும் போது இயங்குகின்றன.

இதே ஜீவகாந்த மின்கசிவு துங்கும் போது ஏற்பட்டால் இதை 'கனவு' என்று சொல்கிறோம். மூளையில் விழிப்பின் போது ஏற்படும் ஜீவகாந்த கசிவு எண்ணமாகிறதென்றால் அதே ஜீவகாந்த கசிவு தூக்கத்தில் ஏற்படும் போது கனவு என்று பெயர் பெறுகிறது. பகலில் எண்ணம். இரவில் கனவு. இத்தகைய கனவு தூக்கத்தில் மட்டும் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. விழிப்பு நிலையில் கூட நாம் ஒன்றும் செய்யாமல் இருக்கும் போது கூட கருமைய பதிவுகள் எண்ணங்களாக மலர்ச்சி பெற்றுக்கொண்டே இருப்பதை உணரலாம். இதை 'பகற்கனவு' என்று சொல்கிறோம். சூழ்நிலைக்கு ஏற்ப, உணவின் தரம் , மற்றும் குணங்களுக்கு ஏற்ப , அன்றாடம் அல்லது அவ்வப்போது மனம் ஈடுபட்டு செயல்படும் நிலைமைக்கு ஏற்ப, எண்ணங்களின் தன்மைகள் கனவின் தன்மைகளாக மாறும். எனவே கனவுக்கு தனியாக மதிப்பளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

1 comment:

GSV said...

தெரியாத கருத்து பகிர்தமைக்கு நன்றி !!! Could you pls give some Reference book or link on this topic?