Sunday, February 20, 2011

விஜயகாந்த் --சிறுகுறிப்பு வரைக

* மாற்றுக் காட்சி என கூறிக்கொண்டாலும் திராவிட கட்சிகளின் சுய விளம்பரங்களை,கட்-அவுட் கலாச்சாரங்களில் அவர்களையே விஞ்சப் பார்கிறது தேமுதிக.

*திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.

*கூட்டணி குறித்து மாறி மாறி பேசினார்.மக்களோடு மட்டும் கூட்டணி..,அதன் பின் மக்களுக்கு நல்லது செய்பவர்களோடு கூட்டணி..(எப்படி ஒப்பந்தம் போட்டுக் கொண்டா?) இப்போது தனக்கு முதலமைச்சர்
பதவி தருவோரோடு கூட்டணி.

* ஊழலை திட்டி விட்டு ஊழல் கரை படிந்த அதிமுக வுடன் கூட்டு சேர அண்டர் கிரவுண்டில் பிஸி..

*இலவசம் குறித்து திமுகவை சாடும் விஜயகாந்தின் கூட்டத்தில் இலவச விநியோகங்களுக்கு பஞ்சமில்லை.

*தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன?அது பற்றி அவர் இன்னும் சொல்லவே இல்லை.என் எனில் அது அவருக்கே தெரியாத ஒன்று.

* மேடையிலேயே வைத்து ஒருமையில் திட்டுவது,கை நீட்டி அடிப்பது,வசவு வார்த்தைகளை பயன்படுத்துவது இதுதான் விஜயகாந்தின் முகம்.

விஜயகாந்தின் சேலம் மாநாட்டு ஒளிபரப்பை தெரியாமல் கேப்டன் டிவியில் பார்த்துவிட்டேன்.மனிதர் என்னா நிதானம்...என்னா பேச்சு..அப்பப்பா...எத்தனை பெக் உள்ளே போனதோ...தள்ளாடி தள்ளாடி உளறிக் கொட்டி டாஸ்மாக் பெஞ்சு போல இருந்தது அந்த கூட்டம்.இலவசமாக கறிக்குழம்பு..,நம்மாளுங்க தான் இலவசம் னா அதுவும் சோறுன்னா விடுவாங்களா..?

நின்று ஒரு நிதானமாக பேச தெரியாத இந்த மனிதனும் நாளைக்கு முதல்வராக ஆசைபடுகிறார்.கொள்ளையடித்து செல்ல புது கும்பல்.இளைஞர்கள் இவர்கள் பின்னால் செல்வது தான் ஆச்சர்யமாக இருக்கிறது.மாற்றுக் கட்சி என்றால் பொறுப்பற்ற கட்சிகளுக்கு மாற்று ஒரு பொறுப்பான கட்சியாக இருக்க வேண்டுமே தவிர ,பொறுப்பற்ற தன்மையில் போட்டி போடுகிற தன்மை அல்ல.விஜயகாந்தின் கனவு வெறும் கனவாகவே மூடிய வேண்டும் என்பதே அடியேனின் விருப்பமும் வேண்டுதலும்.

7 comments:

Sathees said...
This comment has been removed by the author.
Sathees said...

இவர் நிதானமாக பேசினாரோ இல்லையோ,அவருடைய தேமுதிக வின் கட்சி சித்தாந்தம் என்ன என்று கேட்ட நீங்கள் தற்போது உள்ள கட்சிகள் நல்ல சித்தாந்தம் கொண்டதாக இருக்கிறதா? அப்படி அவர்கள் இருந்ததால் என்ன பயன் மக்களுக்கு.நாட்டில் இன்று மக்களுக்கு என்ன அடிப்படை தேவை இல்லாமல் இருக்கிறதோ அதை நீறைவேற்றும் அல்லது நிறைவேற்றுவோம் என கூறும் அவர்களை நாங்கள் நம்புவது ஒரு
மாற்றதிர்க்காகத்தான்.சரி அவர் அப்படியே கொள்ளை அடிக்கிறார் என்று உங்களுக்கு எப்பொழுது தெரியும் அவர் ஆட்சிக்கு வந்தால்தான் அப்படி வருவதற்கு முன்பே இப்படி பேசி பேசி தற்போது ஆட்சி ஆல்பவர்களுக்கே(ஆண்டவர்களுக்க்கே)ஒட்டு போடுங்கள் அல்லது ஒட்டு போடசெல்லாமல் இருந்தால் யாருக்கு பயன் ? அப்படி ஆட்சிக்கு வந்து யாரோ கொள்ளை அடிப்பார்கள் என்பது முடிவாகிவிட்டது யார்யாரோ கொள்ளை அடிப்பதர்ர்க்கு அவர் கொள்ளை அடிக்கட்டுமே(ஆட்சிக்கு வந்தபின் பாருங்கள்).அப்படி கூட்டணி என்று அறிவிக்காத நிலையில் ஒரு சில பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரத்துக்காக போடுவதை நம்பமுடியாது.

நமக்கு மாற்றம் தேவை.(We Need Change)

கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும்.

Ram said...

இந்த கால அரசியல்ல யார திட்றது யார மெச்சிறதுன்னே தெரிலங்க..

மதுரை சரவணன் said...

//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.//

சரியான பார்வை.. வாழ்த்துக்கள்

Thangaraju Ramasamy said...

//திராவிட கட்சிகள் 20 ஆண்டுகள் கழித்து செய்ய தொடங்கியதை கட்சியை தொடங்கும் போதே செய்துவிட்டார்.கட்சியின் துவக்கத்திலேயே குடும்பத்தை கட்சியில் சேர்த்துக் கொண்டார்.தன் மனைவிக்கு மகளிரணி,மச்சானுக்கு இளைஞரணி என தொடங்கும் போதே குடும்பத்திற்கு பங்கு போட்டுவிட்டார்.//

நான் என் 25வது வயதில் பார்த்த/பயன்படுத்திய செல் போனை என் மகள் ஒரு வயதிலேயே பயன் படுத்த தொடங்கிவிட்டாள் என்று சொல்வது போன்றது உம்முடைய பார்வை..

Unknown said...

//கவர்ச்சியில் மயங்கியது போதும்
வார்த்தை ஜாலத்தில் வீழ்ந்தது போதும். //

சொல்லிக் கொண்டே வீழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம்..தேர்தல்,கூட்டணி முடிந்த பின் என்ன நடக்கிறது என்பதை பாருங்களேன்...

rajamelaiyur said...

விஜய்காந்த் மீது என்ன தவறு?

விஜய்காந்த் ஆ.இ.ஆ.தி.மு.க வுடன் கூட்டணி வைததை சிலர் கிண்டல் செய்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகள்.

தனியாக 234 தொகுதிகலிலும் நின்று தன் பலதை நிருபித்தார். பெரிய கட்சினு மார்தட்டும் எந்த கட்சிகும் இந்த துனிவு உண்டா?

தேர்தலுக்கு, தேர்தலுக்கு கூட்டணி மாறும் பா.ம.க போலா மாறினார்?

மக்களுக்காகனு கட்சி ஆரம்பித்து தன் மகன்கலுக்காக கட்சி என வியபாரம் செய்யும் கட்சிகலுக்கு மத்தியில் மனைவி, மச்சான்னுடன் கட்சி ஆரம்பித்து அவர்கலுக்கு பதவி தந்தது என தப்பு?

கூட்டணில் இருந்தால் ஒரு பேச்சு, இல்லை என்றால் ஒரு பேச்சு பேசும் ராமதாஸ் போலவா பேசுகிறார்?

ஜெயலலிதா பற்றி தான் கூறியதை இது வரை மாறுத்ததில்லை.

மகனுக்காக, மகள் மேல் உள்ள வழக்குகாக என கூட்டணி போடும் கட்சிகளுக்கு மத்தியில் கட்சிகாக கூட்டணி சேர்ந்த்தது என தப்பு?


visit : www.kingraja.co.nr