Thursday, March 10, 2011

மறைந்திருக்கும் உண்மைகள்-சுஜாதா

ரிச்சர்ட் இயர்சன் என்பவர் எழுதிய "Management of Absurd" என்கிற ஆங்கில புத்தகத்தை ரசித்து படித்தேன்.உலகின் பல நிகழ்வுகள் முரண்பாடு உடையவை.அபத்தமானவை.வெளிப்படையாக தெரிவதும் உள்ளே இருப்பதும் வேறு வேறு என்கிறார். அதிகமாக ஒடுக்கப் பட்டவர்களுள்ள சமுகத்துக்கு ஆதரவான எழுச்சித் தலைமையும் எதிர்ப்பு குரல்களும் யாரிடமிருந்து வரவேண்டும்? அந்த சமுகத்தை சேர்ந்தவர்களிடமிருந்து தானே? அப்படியில்லை என்கிறார்.பல உதாரணங்கள் காட்டுகிறார்.அமெரிக்க இனத்துக்கு முதல் ஆதவுக்குரல் 'அபாலிஷனிஷ்டுகள் ' என்று சொல்லப் பட்ட வெள்ளியரிடமிருந்து தான் எழுந்ததாம். அதுபோல, அமெரிக்க பெண் விடுதலைக்கான முதல் குரல் கலோரியா ஸ்டைனம் என்கிற பெண்மணி,நல்ல வசதியும் சுதந்திரமும் உள்ளே ஒடுக்கப் படாத குடும்பத்தை சேர்ந்தவராம்.குழந்தைகள் உரிமைகளுக்காக வாதாடுபவர்கள் பெரியவர்களே! டைவர்ஸ் கேஸ்களில் பிரபலமாக விளங்கும் லாயர்கள் பலர் திருப்தியான மணவாழ்க்கை கொண்டவர்கள். நம் நாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன.மூட நம்பிக்கைக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் ஆரம்பத்தில் தீவிரமாக சாமி கும்பிட்டவர்கள்.'தமிழுக்கு உயிரையே தருவேன்' அது மூச்சு,ரத்தம்..என்று சொல்பவர்களை நோண்டி பார்த்தால்,வீட்டில் தெலுங்கு பேசுபவர்களாக இருப்பார்கள்.கன்னடத்தில் மிகப்பெரிய சாகித்ய கர்த்தாக்களான டி.பி.கைலாசம்,மாஸ்தி போன்றவர்கள் தமிழர்கள். சுதந்திர போராட்டத்தை ஊக்குவித காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஒரு வெள்ளையர்--ஏ .ஒ.ஹ்யும்.ஆதரித்தவர் அன்னி பெசன்ட் என்ற மற்றொரு வெள்ளையர்.ரஷ்ய புரட்சிக்கு காரணமாக இருந்த மார்க்சியத்தை கொண்டுவந்த கார்ல் மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர்.இந்த முரண்பாடுகளை திட்டவட்டமாக ஆராய்ச்சி செய்கிறார்.இவற்றை பற்றி நாம் எப்போதும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும்.எந்த திசையிலிருந்து எதிர்ப்போ,புதிய கருத்துக்களோ,எழுச்சியோ,மாறுதலோ,வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது.அதற்கு தயாராக இருக்க வேண்டும்.பெரும்பாலும் அபத்தமான திசைகளிலிருந்து தான் வரும்.அதை உணர்ந்து மேலாண்மைக்கான மேனேஜ்மென்ட் கருவியாக பயன்படுத்தலாம் என்கிற வசீகரத்தை சொல்கிறார். ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கடி திருட்டு போயிற்றாம்.அதை கண்டு பிடிக்க என்னென்னவோ செக்யூரிட்டி வைத்து பார்த்தார்கள்.பிடிக்க முடியவில்லை.பெருத்த நஷ்டம் ஏற்படாவிட்டாலும் பணிபுரிபவர்கள் பயந்தனர்.அதை போக்க,அதன் அதிபர் அபத்தமாக சிந்தித்தார்.ஒரு முன்னால் திருடனையே வேலைக்கு அமர்த்தினார்.அவனுக்கு யார் யார் என்னென்ன எப்போது திருடுவார்கள் அன்பது அத்துப்படியாக இருந்தது.திருட்டு மிகவும் குறைந்தது. Invisible Obivious என்று மற்றொரு கருத்தையும் சொல்கிறார்.கண்ணுக்கு தெரியாத உண்மைகள், உலகின் பல கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக தெரிந்து வரவில்லை.தொழில் புரட்சியை துவக்கி வைத்த ஜேம்ஸ் வாட்டின் ஒரு உதாரணம்.தன் வீட்டு கெட்டிலில் கொதித்த நீராவி அதன் மூடியை மேலெழச் செய்வதை கவனித்தார்.நீராவி இஞ்சினுக்கான ஐடியா தோன்றியது.இதே நீராவி கெட்டிலை யுகம் யுகமாக பலர் பார்த்து வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு அதனுள் பொதிந்திருந்த சக்தி வெளிப்படையாக தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக பென்சிலினியம் என்கிற காளான், பாக்டீரியா நுண்கிருமிகளை வளர விடாமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சி சாலையின் கண்ணாடி தட்டுக்களில் பார்த்திருக்கிறார்கள்.அது மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை சாவடிக்கிறதா பார்க்கலாம் என்று யாருக்கு தோன்றவில்லை.அலெக்ஸாண்டர் ஃபிளமிங்க்கு மட்டும் தோன்றியிருக்கிறது.விளைவு--ஆண்டிபயாடிக்ஸ்...நோபல் பரிசு. நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனங்களை திறமை படைத்த தொழிலாளர்கள் செய்துவந்தார்கள்.முழுமோட்டாரையும் ஒரு ஆளே அல்லது ஒரு சிறிய குழுவினரே செய்து முடித்தார்கள்.ஹென்றி ஃபோர்டு அதில் இருந்த உண்மையை கண்டுகொண்டார்.அது -ஒரு தொழிலாளிக்கு ஒரு திறமை போதும்.அடுத்த தொழிலாளிக்கு மற்றொரு திறமை,..இப்படி படிப்படியாக வாகனத்தை தயாரிக்கும் 'அசெம்ப்ளி லைன்'முறையாக கொண்டு வந்து குறித்த செலவில் அதிக ஆற்றலுடைய சீரான தரமுள்ள மோட்டார் வாகனங்களை கட்ட முடியும் என்று கண்டுகொண்டார்.அதிலிருந்து நவீன தொழிற்சாலை உருவானது. ஃபோர்டை நூற்றாண்டின் சிறந்த தொழிலதிபர் என்கிறார்கள்.

1 comment:

rajamelaiyur said...

Very Good post . . . Keep it up by www.kingraja.co.nr