Sunday, March 27, 2011

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

வாழ்ந்துகொண்டிருக்கிறேன் - தஸ்லிமா நஸ்ரின்

மனித சுபாவம் அப்படி
நீங்கள் உட்கார்ந்தால்
அவர்கள் சொல்வார்கள்
உட்காராதே.

நின்றால் சொல்வார்கள்
உனக்கு என்ன பிரச்சனை
நடக்க கூடாதா?

நடந்தால் சொல்வார்கள்
அவமானம்
உட்கார் நீ.

நீங்கள் தாளமுடியாமல்
படுத்தால் சொல்வார்கள்
எழுந்து நில்.

நீங்கள்
படுக்கவில்லையானால் சொல்வார்கள்
கொஞ்சம் படுக்கலாமில்லையா?

விழிப்பதும் தூங்குவதுமாக என் வாழ்வை
நான் வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்

நான் இக்கணமே இறந்துபோனால்
அவர்கள் சொல்வாகள்
நீ வாழ வேண்டும்

நான் வாழ்வதை பார்த்தார்களானால்
யாருக்கு தெரியும்
அவர்கள் சொல்வார்கள்
நீ இருப்பதே அவமானம்
செத்து தொலை.

அதீத பயத்துடன்
ரகசியமாக
நான் தொடர்ந்து
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்!

தஸ்லிமாவின் சொந்த வாழ்கையை இந்த கவிதை பிரதிபலிப்பதாக இருந்தாலும் கவிதையின் உள்ளடக்கம் எல்லோருக்குமானதே !

2 comments: