Friday, August 20, 2010

சமத்துவம்

ஒரு குட்டி கதை...

ஒரு பெரிய மீன் ஒன்று கடலின் அடிமட்டத்தில் நீந்தி வருகிறது இரை தேடி.
அதன் எதிரில் ஒரு சிறிய மீன் தென்படுகிறது.

உடனே அந்த பெரிய மீன் இதனை விழுங்க வருகிறது.

அதனை பார்த்த சிறிய மீன் பயந்து '' ஐயோ என்னை விழுங்காதே . உன்னை போலவே எனக்கும் இந்த பூமியில் வாழ சம உரிமை இருக்கிறது. என்னை கொள்ளாதே '' என கூச்சலிடுகிறது.

உடனே அந்த பெரிய மீன் '' ம்ம்...இப்போது அதற்க்கு என்ன. உன்னிடம் சமத்துவம் பேச நான் வரவில்லை. முடிந்தால் நீ என்னை விழுங்குவதென்றால் முயன்று பார்'' என்கிறது.

அந்த சிறிய மீன் 'ஆ' என வை திறந்து பெரிய மீனை சுற்றி சுற்றி வருகிறது . எவ்வளவு முயன்றும் அதனால் முடியவில்லை.

கடைசியில் ''ம்ம்.. நீயே விழுங்கிக்கொள். அதுதான் சரி'' என்று சொன்னது சிறிய மீன்.


நம்ம ஊரில் அல்ல.. நமது பூமியின் மொத்த சமத்துவம் எவ்வளவு அழகாக வெளிப்பட்டு விட்டது இந்த குட்டிக்கதையில்..

4 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.....

Unknown said...

சின்ன கதையில் நம் உலகின் சமத்துவத்தை சொன்னதற்க்கு வாழ்த்துக்கள் தோழி...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லா இருக்குங்க.....

கண்ணன். சி said...

நல்லா இருக்குங்க....