Sunday, August 29, 2010

கர்பத்திலேயே இனி கல்வி


ஜீ தமிழில் மட்டும் வரும் விளம்பரம் இது.

அந்த விளம்பரத்தில் காட்டப்படும் குழந்தைகள் 1 முதல் 2 வயதுக்குட்பட்டவை. அக்குழந்தைகளிடம் அட்டைகளில் ஏதேதோ எழுதிக்காட்டுகிறார்கள்.

அவைகளும் அதை பார்த்து ''cat .., elephant .., wave என சொல்கின்றன.

அதில் வேடிக்கை ஒரு குழந்தைக்கு இன்னும் பேசவே வரவில்லை. அதனிடமும் அட்டையில் 'hands என்று எழுதி கட்டுகிறார்கள். அது உடனே இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டி ஆட்டி காட்டுகிறது.

'' ....இச்சிறு குழந்தைகளும் தங்கள் வயதுக்கு மேலான நிலையில் கற்கின்றன. பேசுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கும் ''early leaning system'' ஐ அறிமுகப்படுத்தி அவர்களை வாழ்கையில் 'மேம்படுத்தி' உயர்வடையச் செய்யுங்கள் .. ''என்று வருகிறது.

அந்த குழந்தைகளை பார்க்க பாவமாக இருக்கிறது. முன்பெல்லாம் 5 வயது வரையாவது சுதந்திரம் இருந்தது குழந்தைகளுக்கு.

இப்போது அதுவும் போய் 3 வயதிலேயே பள்ளிகளில் தங்கள் குழந்தை பருவத்தை தொலைத்து விடுகிறார்கள். இந்த 3 வயது கூட பொறுக்க வில்லை போல. அப்போதிருந்தே கற்க ஆரம்பித்து வாழ்கையில் 'மேன்மை' அடைய செய்யவேண்டுமாம்.


இன்னும் கொஞ்ச நாள் போனால் இப்படியும் விளம்பரங்கள் வரலாம்..

''பெற்றோர்களே..

உங்கள் குழந்தைகள் பிறக்கும் போதே A.., B.., C.., D.., சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா..?

''mummy .. daddy '' சொல்லி கொண்டே பிறக்க வேண்டுமா..,

''mummy இதோ வந்துட்டேன் .. ''

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்.

கர்ப்பத்தில் இருக்கும் போதே அக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து அறிவுள்ள பிள்ளைகளாக பிறக்க வைக்கிறோம்.

பிறக்கும் போதே ''வீல்..'' என அழுது கொண்டே பிறக்கும் மற்ற சாதாரண குழந்தைகளை போல அல்லாமல் mummy , daddy ,cat .., elephant .., wave என பலவாறு சொல்ல வைக்கிறோம். (கண்டிப்பா அம்மா, அப்பா என்று சொல்ல வைக்க மாட்டோம்).

இதற்கும் பெற்றோர் படையெடுத்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

....கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்துட்டா அது ஜீன்ல போய் பதிஞ்சிடும். அப்புறம் மறக்கவே மறக்காது, நம்ம பிள்ளைங்க தான் இனி ஸ்கூல் பர்ஸ்ட். பின்னாடி IAS , MBBS , ENG கெல்லாம் கஷ்டப்பட தேவை இருக்காது பாரு .... , ''

என பெற்றோர்கள் ஆச்சர்யத்தோடு முன்பதிவு செய்தாலும் செய்வார்கள்.


ஏன் எனில் கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்து விட்டால் நமக்கு இன்னும் சௌகரியம் தானே

1 comment:

GSV said...

கேட்க வேண்டியவங்க கேட்டா சரிதான்....சரியான ஆதங்கம்.