Monday, November 8, 2010

வெறுப்பதில் உள்ள சந்தோசம்

வில்லியம் ஹாஸ்டலி என்னும் ஆங்கில இலக்கிய கர்த்தா வெறுப்பதில் உள்ள சந்தோசத்தை பற்றி 'On the pleasure of hating' என்று ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ''நாம் வெளிப்படையாக செய்யும் காரியங்களில் மனிதாபிமானம் கலந்து விட்டோம். ஆனால் மனதில் உள்ள இச்சைகளையும் கற்பனைகளையும் கட்டுப்படுத்த இன்னும் கொஞ்ச நாளாகும்'' என்றார். இது 1828 இல் எழுதிய கட்டுரையில். இன்று 2010 இல் கூட வெளிசெயல்களுக்கும் உள்மன விருப்பத்திற்கும் உள்ள வேற்றுமை அப்படியே இருக்கிறது.


அண்மையில் பரபரத்த நித்யானந்தரின் டிவி காட்சிகள். ஒருவர் விடாமல் எல்லாரும் பேசி பேசி தீர்த்தார்கள். பிரபல சாமியார், நடிகை, செக்ஸ் வக்கிரங்கள், வெளியில் தெரியாத நடவடிக்கைகள் மேல் ஓர் ஆர்வம் எல்லாம்தான் காரணம். (நித்யா கொஞ்சம் இருந்ததும் ஒரு காரணம் )

இதில் ஆழமாக பொதிந்துள்ளசமூக அடையாளங்களை தான் ஹாஸ்டலி அப்போதே சொல்லி இருக்கிறார். ''We give up the external demonstration, the brute violence but cannot part with the essence or principle of hostility.''

மூர்க்கதனமான வன்முறையின் வெளி வடிவங்களை நாம் கைவிடுகிறோம். ஆனால் விரோதத்தின் சாரத்தை நம்மால் கைவிட முடியாது.

நம் ஊடகங்கள் (பத்திரிக்கை , டிவி செய்தி சேன்னல்கள்) எப்போதும் கெட்ட செய்திகளையே தருவதற்கு இதுதான் காரணம். குடிசை எறிந்தால் தான் வியாசர்பாடி பற்றி நியூஸ் வரும். எங்காவது குண்டு வெடித்து ரத்த கெளரியா? , கட்டிடங்கள் பற்றி கொண்டு எரிகிறாதா உடனே கேமராவை தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள். அதை நாடு முழுவதும் சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்.

அசாமில் உள்ள சிறிய ரயில் நிலையமான கைஸ்வல் சரித்திரத்தில் இடம்பெற 500 பேர் சாக வேண்டி இருக்கிறது. இரட்டை கோபுரமும், ஒசாமாவும் எல்லாரும் அறிய 2000 பேர் சாக வேண்டி இருக்கிறது. ரயில்கள் ஓடுவது செய்தி அல்ல. அவை மோதிக்கொள்வது தான் செய்தி. பி.பி.சி., சி.என்.என் போன்ற உலக செய்திகளும் அவ்வண்ணமே. ஒரு வாரம் அந்த சேன்னல்களை கவனித்தால் இந்தோனேசியாவில் கிறிஸ்தவ - முஸ்லிம் இனக்கலவரம்...கொசோவாவில் அல்பேனிய - செர்பியா மோதல்கள், ஆப்ரிக்க இனச்சண்டையில் கைகால் வெட்டினது, ஸ்ரீ லங்காவில் மனித வெடி குண்டு .... இப்படி செய்தி என்பதற்கே கெட்ட செய்தி மட்டும் என்றாகி விட்டது.

எத்தனையோ நகரங்களில் எத்தனையோ அழகான மனைவிகளுடன், மச்சினர்கள் கேலியும் அன்பும் பாராட்டுமாக சரளமாக வாழ்கிறார்கள். ரயில்களும் ஏரோபிலேன்களும் நேரத்தில் பத்திரமாக செல்கின்றன. இவையெல்லாம் செய்தி இல்லை. மதனியின் முன் மச்சினன் அண்டர்வேரில் நடை பழக வேண்டும். ரயில் மொத்த வேண்டும். ப்ளேன் நொறுங்க வேண்டும். நதி வெள்ளம் ஊருக்குள் புகுந்து நூறு பேருக்காவது காலரா வார வேண்டும். அப்போதுதான் செய்தி. எத்தனையோ ஊர்களில் சின்ன சின்ன பாட்டு போட்டியும் பேச்சு போட்டியும் நடனங்களும், உரியடிகளும், கரகங்களும் கொடிதிருவிழாக்களும் நடக்கின்றன. அவையெல்லாம் செய்தி இல்லை. யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டால் தான் 'ஊடக' தகுதி பெறுகிறார்கள். . பாராளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ உருப்படியாட ஏதாவது நடந்தால் செய்தி இல்லை. வேட்டியை உருவிக்கொண்டால், நாற்காலிகள் பறந்தால் அது தான் முக்கிய செய்தி.

சுஜாதா அவரின் நண்பரிடம் இது பற்றி கெட்ட போது..''நல்ல செய்தி கொடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். ரேட்டிங் விழுந்து விடும்'' என்று சொல்லி இருக்கிறார். ஒரு சைக்காலஜிஷ்டை கேட்டால், ''நம் மனதில் சமூக தேவைகளாலும் நாகரீகத்தினாலும் கட்டுப்பாடுகளினாலும் அடக்கிவைக்கப்பட்ட வன்முறை உணர்சிகளுக்கு உபத்திரவம் இல்லாத வடிகால்கள் இவை'' என்கிறார்.

வெறுப்பதில் சந்தோசம் இருக்கிறது. ஒரு கரப்பான் பூசியையாவது சிலந்தியையாவது வெறுக்க வேண்டும்.
நம் எண்ணங்களின் செயல்பாடுகளின் ஊற்றுக்கண் வெறுப்புதான் என்கிறார் ஹாஸ்டலி. ...''without something to hate, we should lose the veru spring of thought and action...''

மத சார்பு , தேசபக்தி எல்லாமே நம் உள்ளே உள்ள வெறுப்பின் கௌரவமான வடிகால்கள் நொண்டி சாக்குகள் என்கிறார். தொலைகாட்சியில் இந்த அவலங்கள் எல்லாம் உண்மையாக நம் நடுக்கூடங்களில் தெரிந்தாலும் எல்லாமே பிக்ஸெல் வடிவங்கள். எவ்வித பொறுப்பும் அபாயமும் இன்றி வெறுக்க முடிகிறது. கறிகாய் நறுக்கி கொண்டே ரத்த தரிசனம் செய்ய முடிகிறது. நம்மிடம் மிச்சமுள்ள ஆதி மனித இச்சையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. தெருவில் யாராவது சண்டை போட்டால் கொஞ்சம் போடட்டும் என்று விட்டுவிட்டு தான் அடக்க முயற்சி செய்கிறோமே.. அதுபோல !

WWF காட்சிகளை ஐந்திலிருந்து பதினெட்டு வரை நாற்பதுக்கும் மேல் உள்ள தாத்தாக்கள் வரை ரசிப்பதற்கும் இதுதான் காரணம். நல்ல விஷயத்தை யாரும் பார்பதில்லை என்கிற ஆதாரமான அதிர்சிகரமான சித்தாந்தம் தான் காரணம்.

2 comments:

Praveenkumar said...

உண்மையில் மிக அருமையான கட்டுரைங்க..!! கட்டுரைக்கேற்ப கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்கள் அதைவிட அருமை..!! தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..!! ஒரு சில இடங்களில் மட்டும் சிறுசிறு எழுத்துப்பிழைகள் அடுத்த முறை நிச்சயம் அவைகளின்றி எதிர்பார்க்கிறேன்..!!
பகிர்வுக்கு நன்றி..!!

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமையான அலசல்...