Wednesday, November 3, 2010

அரசு ஊழியர்கள் அகால மரணம் - ஐயோ பாவம்

சென்ற வார செய்தி

பணி மிகுதியின் காரணமாக அரசு ஊழியர்கள் அகால மரணம் அடைகிறார்கள். மக்கள் நினைப்பது போல அவர்கள் வேலை வெட்டி செய்யாமல் சும்மா எல்லாம் இல்லை.

அரசு ஊழியர் சங்கம் கோவை..

அப்படியா? உங்களின் பணிமிகுதின்னா என்ன? இதுவா?

எந்த கடையில் எந்த வடை டேஸ்டா இருக்கும்

அலுவலகத்தில் மானாவாரி அரட்டை அடிக்கறது

இரட்டை அர்த்தத்தில் அலுவலகத்தில் கும்மாளமடிப்பது

போனா போகுதுன்னு ஒப்பிற்கு சில கையெழுத்து

அப்பாவி மக்களை இஸ்டத்திற்கு அலைக்கழிப்பது

இளிச்சவாயன் யாராவது மாட்டினா தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் வசைமொழிகிறது (கெட்ட வார்த்தை கத்துக்கணும்ன அவங்க கிட்ட போகலாம் )

உள்ளூர் பெண் ஊழியர்கள்னா, நைட்டியோட அலுவலகம் வந்து குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட சொல்றது, (முக்கியமா விஜய் பாட்டுக்கள்)

உன் புருஷன் இவன்தான்றதுக்கு என்ன சாட்சி? குடும்ப அட்டையில் இருப்பது உன் புருஷன் தான்னு எப்படி எங்களுக்கு தெரியும்? என்பது போன்ற கொச்சை கேள்விகள் கேட்பது.

'கமிஷன்' எவன் குடுக்கரானோ அவனுக்கு முதலில் கையெழுத்து போட்டு தங்கள் கடமையில் கண்ணா இருப்பது

தங்கள் குடும்பம் , உறவு, தூரத்து உறவுக்கெல்லாம் வேலை வாங்கி வாங்கி கொடுக்கிறது

இந்த கடமைகளுக்காகவா அகால மரணம் அடையறாங்க..
எங்களுக்கெல்லாம் காது குத்தியாசுப்பா எப்பவோ..

(இக்கட்டுரை மேற்கண்ட 'பணிகளை' செய்பவர்களை மட்டுமே ..! அவர்களை நேரிலேயே பார்த்தால்... நேர்மையான உழியர்கள் இருந்தால், அவர்களை அல்ல.. )

6 comments:

kiruba said...

நீங்கள் சொல்லுவது உண்மை தான் ..!!

Praveenkumar said...

சரியாகவே கணித்து இருக்கீங்க..!! முன்கூட்டிய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் யோஹனா..!!

Philosophy Prabhakaran said...

உங்களது வலைப்பூவை இன்றுதான் முதல்முறையாக பார்க்கிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

shortfilmindia.com said...

இது அநியாயம்ணே.. நீங்க நினைக்கிறாமாதிரி அரசு ஊழியர்கள் இருக்க முடியாது.. டிஸ்கி: நான் அரசு ஊழியன் இல்லை..

கேபிள் சங்கர்

GSV said...

//சரியாகவே கணித்து இருக்கீங்//??? >>>

கணிப்பு இல்ல!!! >> //அவர்களை நேரிலேயே பார்த்ததால் !!!//

@ Cable Sankar >>> :)))))))))) !!!
இன்னும் தெளியல போலிருக்கே !!!

இவுங்களை எல்லாம் நிக்க வச்சி மூக்குல சரவடி கொளுத்தணும் ... ஒரே தீர்வு amma ஆட்சி தான் !!!

Prasanna said...

பயங்கர காட்டமா இருக்கு :)