Friday, December 31, 2010

நாளை மற்றுமொரு நாளே!

பூமி சுற்றுவது நிற்கப்
போவதில்லை.

சூரியன் தன் பணியை
நிறுத்தப்போவதில்லை

கடல் அலைகளில் மாற்றம்
ஒன்றுமில்லை

இந்த பிரபஞ்சத்தின் பணியோ
மாறப் போவதில்லை

பஞ்சபூதத்தின் பலன்களும்
எப்போதும் போலவே !

செவ்வனே சுற்றும் பூமியை
கூறுபோடும் மனிதனின் பேராசை
அடங்கப்போவதில்லை!

மக்களை சுரண்டும் 'தலைவர்களுக்கு'
மான ரோஷம் அது எப்போதும் வரப்போவதில்லை

இது எதையும் கண்டும் காணாமல்
செல்லும் ஏமாளி கோமாளிகளாகிய
நாமும் திருந்தப் போவது இல்லை

பிச்சை எடுக்கும் சிறுவர்களையும்
சோற்றுக்கு சாகும் மனிதர்களும்
நம் நினைவுக்கு என்றும் வரப்போவதில்லை!

தொலைகாட்சி அலங்கோலங்களும்
அதை பார்த்து ரசிக்கும்
ரசிகனின் மனநிலை மாறப் போவதில்லை

வெள்ளித்திரை மனிதர்களின்
தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும்
மானங்கெட்ட நிலை மாறப்போவதில்லை !

காசை கரியாக்கி வணிக
நிறுவனங்களை
வாழ வைக்கும் மக்களுக்கு
புத்தி வரப்போவதில்லை

ஒரு வேலை சோற்றுக்கு சாகும்
மனிதர்களுக்கும்,
கல் சுமக்கும் கூலி தொழிலாளிக்கும்

நாளை மற்றுமொரு நாளே !

2 comments:

இராகவன் நைஜிரியா said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.