Sunday, May 16, 2010

என்ன கொடுமை சார் இது?

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு தி.மு.கவில் இணைந்தார்.

கருணாநிதி: பெரியார் என்ற படத்தில் குஷ்பு மணியம்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை நன்கு உணர்ந்து வைத்திருப்பதினால் தான் அவரால் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க முடிந்தது. அந்த வகையில் குஷ்பு பாராட்டுக்கு உரியவர். இதன்மூலம் பெரியாரின் மீதும் திராவிடத்தின் மீதும் (?) அவருக்கு உள்ள பற்று நன்கு தெளிவாகிறது. குஷ்பு தி.மு.கவில் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

குஷ்பு : எனது கொள்கைகளும் (?) தி.மு.கவின் கொள்கைகளும் ஒத்திருக்கின்றன. அதனால் தி.மு.கவில் இணைகிறேன்.

--

குஷ்பு தி.மு.கவில் இணைவது இருக்கட்டும். அவருக்கு அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் இருக்கின்றதா.?
அவருடன் ஒரு மினி பேட்டி

கேள்வி 1 : நீங்கள் தமிழ் பெண்ணா?
குஷ்பு: இல்லை. மும்பை.

(ஆஹா , இதுதான் முக்கிய தகுதியே. வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வந்தார் வாழலாம். வாழ்ந்தபின் பொழுது போகலன்னா அரசியலுக்கும் வரலாம். யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. சொந்த மாநில மக்கள் வந்தாதான் இங்கு கேள்விகள் ஆயிரம். வேறு மாநிலத்தவருக்கு அந்த பிரச்சனையே இல்லை. தமிழர் அல்லாதோருக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரஜினியை எவ்வளவோ முயற்சித்தார்கள். அவருக்கு கொடுப்பினை இல்லை. நீங்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டீர்கள்)

கேள்வி 2 : திராவிடம்னா என்னனு தெரியுமா?..
குஷ்பு: திராவிடம்.. whats that ? அது எந்த கடையில விக்கிது

(கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு பல வருடங்கள் குப்பை கொட்டுபவர்களுக்கே தெரியாத விஷயம். இவருக்கு மட்டும் எப்படி தெரியும். புரியாத ஒன்னை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு விட்டுவிடுங்கள். அரசியலுக்கு வர இது முக்கியமா தெரியாம இருக்கணும். ஆனால் வரும் காலங்களில் திராவிடம் என்ற வார்த்தையை குஷ்பு அதிகம் பயன் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.)

கேள்வி 3 : உங்களுக்கு தமிழ் தெரியுமா?
குஷ்பு: தமிள் ?

(வேண்டாம் வேண்டாம் இதுக்குமேல எந்த தகுதியும் தேவையே இல்லை. ஏற்கனவே நீங்க ஒரு பாராட்டு விழால பேசின தமிழை கேட்டு இதயம் வெடிக்காம இருக்கும் கூட்டம் நாங்க. அந்த கொஞ்சும் தமிழ கேட்டுத்தான் கருணாநிதி உங்கள கட்சியில சேர்த்துட்டார் போல. கோவில் கட்டின கூட்டம், இட்லிக்கு பேர் வச்ச கூட்டம் உங்களுக்கு சி.எம்.சீட் தர மாட்டமா? 2021 இல் நீங்க தான் சி.எம்.)

கேள்வி 4 : பெரியார்ன யாருன்னு தெரியுமா?
குஷ்பு: சத்யராஜ். என்னா பெரியார் படத்தில் அந்த கேரக்டரை அவர் தான் பண்ணார்.

(நோ கமெண்ட்ஸ்)

தமிழர்களே, இதிலிருந்து குஷ்புவுக்கு அரசியலுக்கு வர அனைத்து தகுதிகளும் இருப்பது நன்கு தெளிவாகிறது. தமிழனின் தலையெழுத்து அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்.

மற்றொரு காட்சி..
ஈழத்தமிழன்: அய்யா, எங்களுக்கு உதவி பண்ணுங்கயா. ஈழத்துல நாங்க தெனம் தெனம் செத்துட்டு இருக்கம். பெண்டு பிள்ளைகள் சோத்துக்கு வழி இல்லாம கிடக்காங்க. வாழ வழி இல்லாம நிக்கறம்யா. ஏதாவது வழிசெயுங்கய்யா .

கருணாநிதி: யார் நீ?

ஈழத்தமிழன்:ஈழத்தமிழன்யா.. தொப்புள்கொடி உறவுய்யா நாம..

கருணாநிதி: அதான் யாருன்னு கேட்டேன்.
ஏய்யா, குஷ்பூ வந்துட்டு போய் இருக்காங்க. அத பத்தி பேசாம, ஈழம், பட்டினின்னுட்டு. போய்யா.. போய் வேலயப்பாரு. உன்ன யார் உள்ள விட்டது. ஹலோ செக்யூரிட்டி..

தமிழர்களே இன்றைய ஈழத்தமிழனின் நிலை இதுதான்..

ச்சே.ச்சே.. நாம் ஏன் இதை பத்தி எல்லாம் சிந்திக்கிறோம். கூடாது கூடாது.
குஷ்பூ வந்துட்டாங்க. இனி அடுத்த பாராட்டு விழாவுக்கு ரெடி ஆகணும். ராவணன் வேற ரிலீஸ் ஆகுது. செம்மொழி மாநாடு இருக்கு. நமிதாவுக்கு கோவில் கட்ட அடிக்கல் நடக்குது . அதை கவனிக்கணும். ஈழனாவது தமிழனாவது.. போய் வேலைய பாருங்கய்யா..

3 comments:

prince said...

சும்மா நறுக்குன்னு நாலு வார்த்தை உசிருக்குள்ள ஊசிய நுழச்சிட்டீங்க ..

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்று