Monday, September 27, 2010

குங்குமம் வழியில்....

நூலகத்தில் கேட்பாரற்று கிடந்த அருமையான கவிதைகள் படிக்கக்கிடைத்தது..

கவிஞர் ரவிதாசனின் அற்புதமான வரிகள்..



'' என்
ஒவ்வொரு கவிதைப் புத்தகத்திற்கும்
இலவச இணைப்பாக
லட்டு ஒன்று தரலாமென
நினைக்கிறேன்
லட்டு ஒன்றுக்கு
புத்தகம் இலவசமெனச்
சொல்லிவிட்டால்
என்ன செய்வது?''