Showing posts with label படித்தது. Show all posts
Showing posts with label படித்தது. Show all posts

Thursday, March 10, 2011

மறைந்திருக்கும் உண்மைகள்-சுஜாதா

ரிச்சர்ட் இயர்சன் என்பவர் எழுதிய "Management of Absurd" என்கிற ஆங்கில புத்தகத்தை ரசித்து படித்தேன்.உலகின் பல நிகழ்வுகள் முரண்பாடு உடையவை.அபத்தமானவை.வெளிப்படையாக தெரிவதும் உள்ளே இருப்பதும் வேறு வேறு என்கிறார். அதிகமாக ஒடுக்கப் பட்டவர்களுள்ள சமுகத்துக்கு ஆதரவான எழுச்சித் தலைமையும் எதிர்ப்பு குரல்களும் யாரிடமிருந்து வரவேண்டும்? அந்த சமுகத்தை சேர்ந்தவர்களிடமிருந்து தானே? அப்படியில்லை என்கிறார்.பல உதாரணங்கள் காட்டுகிறார்.அமெரிக்க இனத்துக்கு முதல் ஆதவுக்குரல் 'அபாலிஷனிஷ்டுகள் ' என்று சொல்லப் பட்ட வெள்ளியரிடமிருந்து தான் எழுந்ததாம். அதுபோல, அமெரிக்க பெண் விடுதலைக்கான முதல் குரல் கலோரியா ஸ்டைனம் என்கிற பெண்மணி,நல்ல வசதியும் சுதந்திரமும் உள்ளே ஒடுக்கப் படாத குடும்பத்தை சேர்ந்தவராம்.குழந்தைகள் உரிமைகளுக்காக வாதாடுபவர்கள் பெரியவர்களே! டைவர்ஸ் கேஸ்களில் பிரபலமாக விளங்கும் லாயர்கள் பலர் திருப்தியான மணவாழ்க்கை கொண்டவர்கள். நம் நாட்டிலும் பல உதாரணங்கள் உள்ளன.மூட நம்பிக்கைக்கு எதிராக புரட்சி செய்தவர்கள் ஆரம்பத்தில் தீவிரமாக சாமி கும்பிட்டவர்கள்.'தமிழுக்கு உயிரையே தருவேன்' அது மூச்சு,ரத்தம்..என்று சொல்பவர்களை நோண்டி பார்த்தால்,வீட்டில் தெலுங்கு பேசுபவர்களாக இருப்பார்கள்.கன்னடத்தில் மிகப்பெரிய சாகித்ய கர்த்தாக்களான டி.பி.கைலாசம்,மாஸ்தி போன்றவர்கள் தமிழர்கள். சுதந்திர போராட்டத்தை ஊக்குவித காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் ஒரு வெள்ளையர்--ஏ .ஒ.ஹ்யும்.ஆதரித்தவர் அன்னி பெசன்ட் என்ற மற்றொரு வெள்ளையர்.ரஷ்ய புரட்சிக்கு காரணமாக இருந்த மார்க்சியத்தை கொண்டுவந்த கார்ல் மார்க்ஸ் ஒரு ஜெர்மானியர்.இந்த முரண்பாடுகளை திட்டவட்டமாக ஆராய்ச்சி செய்கிறார்.இவற்றை பற்றி நாம் எப்போதும் பிரக்ஞையுடன் இருக்க வேண்டும்.எந்த திசையிலிருந்து எதிர்ப்போ,புதிய கருத்துக்களோ,எழுச்சியோ,மாறுதலோ,வரும் என்பதை எதிர்பார்க்க முடியாது.அதற்கு தயாராக இருக்க வேண்டும்.பெரும்பாலும் அபத்தமான திசைகளிலிருந்து தான் வரும்.அதை உணர்ந்து மேலாண்மைக்கான மேனேஜ்மென்ட் கருவியாக பயன்படுத்தலாம் என்கிற வசீகரத்தை சொல்கிறார். ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கடி திருட்டு போயிற்றாம்.அதை கண்டு பிடிக்க என்னென்னவோ செக்யூரிட்டி வைத்து பார்த்தார்கள்.பிடிக்க முடியவில்லை.பெருத்த நஷ்டம் ஏற்படாவிட்டாலும் பணிபுரிபவர்கள் பயந்தனர்.அதை போக்க,அதன் அதிபர் அபத்தமாக சிந்தித்தார்.ஒரு முன்னால் திருடனையே வேலைக்கு அமர்த்தினார்.அவனுக்கு யார் யார் என்னென்ன எப்போது திருடுவார்கள் அன்பது அத்துப்படியாக இருந்தது.திருட்டு மிகவும் குறைந்தது. Invisible Obivious என்று மற்றொரு கருத்தையும் சொல்கிறார்.கண்ணுக்கு தெரியாத உண்மைகள், உலகின் பல கண்டுபிடிப்புகள் வெளிப்படையாக தெரிந்து வரவில்லை.தொழில் புரட்சியை துவக்கி வைத்த ஜேம்ஸ் வாட்டின் ஒரு உதாரணம்.தன் வீட்டு கெட்டிலில் கொதித்த நீராவி அதன் மூடியை மேலெழச் செய்வதை கவனித்தார்.நீராவி இஞ்சினுக்கான ஐடியா தோன்றியது.இதே நீராவி கெட்டிலை யுகம் யுகமாக பலர் பார்த்து வந்திருக்கிறார்கள்.அவர்களுக்கு அதனுள் பொதிந்திருந்த சக்தி வெளிப்படையாக தோன்றவில்லை. ஆராய்ச்சியாளர்கள் பல வருடங்களாக பென்சிலினியம் என்கிற காளான், பாக்டீரியா நுண்கிருமிகளை வளர விடாமல் தடுக்கிறது என்பதை ஆராய்ச்சி சாலையின் கண்ணாடி தட்டுக்களில் பார்த்திருக்கிறார்கள்.அது மனித உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை சாவடிக்கிறதா பார்க்கலாம் என்று யாருக்கு தோன்றவில்லை.அலெக்ஸாண்டர் ஃபிளமிங்க்கு மட்டும் தோன்றியிருக்கிறது.விளைவு--ஆண்டிபயாடிக்ஸ்...நோபல் பரிசு. நூற்றாண்டின் ஆரம்பத்தில் மோட்டார் வாகனங்களை திறமை படைத்த தொழிலாளர்கள் செய்துவந்தார்கள்.முழுமோட்டாரையும் ஒரு ஆளே அல்லது ஒரு சிறிய குழுவினரே செய்து முடித்தார்கள்.ஹென்றி ஃபோர்டு அதில் இருந்த உண்மையை கண்டுகொண்டார்.அது -ஒரு தொழிலாளிக்கு ஒரு திறமை போதும்.அடுத்த தொழிலாளிக்கு மற்றொரு திறமை,..இப்படி படிப்படியாக வாகனத்தை தயாரிக்கும் 'அசெம்ப்ளி லைன்'முறையாக கொண்டு வந்து குறித்த செலவில் அதிக ஆற்றலுடைய சீரான தரமுள்ள மோட்டார் வாகனங்களை கட்ட முடியும் என்று கண்டுகொண்டார்.அதிலிருந்து நவீன தொழிற்சாலை உருவானது. ஃபோர்டை நூற்றாண்டின் சிறந்த தொழிலதிபர் என்கிறார்கள்.

Friday, February 18, 2011

அரசியல் வாதிகள்

இந்தியாவில் மட்டுமல்ல;உலகம் முழுவதிலுமே அரசியல்வாதிகள் இறைவனின் அபூர்வ ஸ்ருடியாகக் காட்சியளிக்கிறார்கள்.

ஒன்று--

சுயநலத்தை அடிப்படையாக வைத்து தங்கள் அரசியலை வைத்து கொள்கிறார்கள்.

இல்லை;அரசியலை அடிப்படையாக வைத்து சுயநலத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்

சுயநலமே இல்லாத அரசியல்வாதிகள் அபூர்வமாக தோன்றி கொஞ்ச நாளிலேயே அஞ்ஞாத வாசம் புரிய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இந்த சமுதாயம் எந்த கணக்கு போட்டு அரசியல் வாதிகளை ஏற்று கொல்கிறது?

அவனவன் பேச்சையும்,எழுத்தையும் பார்த்து !

காரியம் செய்பவனை விட வேஷம் போடுகிறவனுக்கு தான் நினைப்பது கிடைக்கிறது.

நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல் சர்வாதிகாரத்தில் ஒரே ஒரு அயோக்கியனை தான் மக்கள் தாங்க வேண்டியிருக்கிறது.

சொந்தமாக தொழில் நடத்தி வருமானம் பெற்று குடும்பத்தை காப்பாற்றிக்கொண்டு அரசியலை இலவச கடமையாக செய்வோர் இந்த நாட்டில் மிக குறைவு!

அரசியலையே தொழிலாக நடத்துவோர் தான் மிக அதிகம்.

ஓர் அரசியல் வாதிக்கு திடீரென்று சொத்து வந்தது.வீடு வந்தது என்றால் அது எப்படி வந்ததென்று கேட்க வேண்டியவர்கள் மக்கள்.

சிலர் அதுமாதிரி கேட்கிறார்கள்.சிலர் இப்படி நமக்கு வராதா என்று ஆயாசப் படுகிறார்கள்.

அரசியல்வாதி மக்களுக்கு அரசியலில் மட்டும் தவறான வழியை காட்டவில்லை.நாணயத்திலும் நடத்தையிலும் அதே வழியை காட்டுகிறான்

பணம் எதையும் நிர்ணயித்துவிடுகிறது.

ஓர் அயோக்கியனை யோக்கியன் என்று காட்டுவதற்கும் அது பயன்படுகிறது

பல நேரங்களில் அரசியல் தொண்டர்கள் மீது நான் பரிதாப்படுவதுண்டு.

அவர்களில் பலர் கள்ளங்கபடமே அறியாதவர்கள்.

அதனால் தான் அவர்கள் தலைவர்களாக வரமுடியவில்லை

அரசியலில் கார் வாங்கியவனும் வீடு வாங்கியவனும் தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறான்.

கால் போனவனும் கண் போனவனும் என் கண்ணுக்கு தெரிகிறான்

யாரை நோவது?

மக்களை தவிர யாரை நோவது?

ஒவ்வொரு தடவையும் எரியாத விளக்குக்கே எண்ணெய் ஊற்றி பழக்கப் பட்டுப்போன மக்கள் இப்போது மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்?

அழகான பேச்செல்லாம் அவர்களுக்கு உண்மையாகவே தோன்றுகிறது.

ஏன்?

படித்தவனுக்கே அப்படிதான் தோன்றுகிறது.படிக்காதவன் நிலை என்ன?

உணர்ச்சி பூர்வமாக தோன்றுகிற உண்மைகளை இதுவரை எந்த அரசியல்வாதி வெளியிட்டிருக்கிறான்?

ஒரு பொய் சொல்ல ஆரம்பித்து கூட்டம் முழுக்க நம்பி தன் பக்கம் வந்தவுடன் மெதுவாக அந்த பொய்யிலிருந்து அவனும் வாபசாகி தன்னுடைய கூட்டத்தையும் வாபசாக செய்து அந்த வெறுங் கூட்டத்துக்கு தலைவனாகி விடுகிறான்

என் அனுபவத்தை சொல்லுகிறேன்.

திராவிட நாடு என்பது வெறும் கற்பனை.அது கிடைக்காது என்று தெரிந்தே திராவிட நாடு கேட்டோம்.

ஆனால் திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையை மிக அழுத்தமாக ஓட்டினோம்

ஒரு கட்டத்தில் அது பற்றி விவாதித்து விட்டு நானும் சம்பத்தும் வெளியேறினோம்.

உடனே திமுக தலைவர்கள் "திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு கேட்போம்.சம்பத் ,கண்ணதாசனைப் போல கோழைகளல்ல நாங்கள் " என்று முழங்கினார்கள்.

அந்தோ! என்ன சொல்வேன்..

பதவிக்கு போகவேண்டும் என்று ஆசை வந்து ஆறாவது மாதமே அவர்களும் வாபசானார்கள்.

வாபசான அழகையும் நியாயப் படுத்தி தங்கள் கூட்டத்தை நம்ப வைத்தார்கள்.அவர்களும் நம்பினார்கள்.

நாத்திக துவேஷம்,சுயமரியாதை,பார்ப்பன துவேஷம் எல்லாம் வாபசான கதையும் இதுதான்..

காலங்களாலே கருத்துகள் மாறலாம்

ஆனால் இதை மாற்றிக் கொள்ளப் போகிறோம் என்று தெரிந்தே ஒரு கருத்தை சொல்வது கிரிமினல் குற்றம்.

நியாயங்கள் தெளிவாக தெரியும் போதே அநியாயங்களுக்கு துணை போகிற மக்கள் உருப்படாத பிள்ளைகளைதான் தலைவர்களாக பெறுவார்கள்.

ஓர் அரசியல் தலைவரிடம் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு பிறகு அவர் போடும் கோடெல்லாம் ஓவியம்,அவர் கத்தும் வார்த்தைகள் எல்லாம் காவியம் என்று விஞ்ஞான விளக்கம் கூறும் மக்கள் அந்த தலைவர் தவறு செய்வதாக சொன்னால் என்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் என்றுக் கொள்ளமாட்டார்கள் என்ற தைரியம் வந்ததும் அந்த தலைவரும் தவறு செய்வதையே தேசியமயமாக்கி விடுகிறார்.

ஜனநாயகம் வருஷா வருஷம் பாடம் போதிக்கிறது.ஒரே பாடத்தை திரும்ப திரும்ப போதிக்கிறது.

மக்கள் எனும் மக்குகள் இதுவரை ஒரு பரிட்சையில் கூட பாஸ் பண்ணவில்லை !

-- கண்ணதாசன்

Friday, February 4, 2011

புது மாதிரிக் கதை



"கதையில் ஒன்றும் புதிதாக இல்லையே..இந்த மாதிரி கதை ஒன்றை பிரெஞ்சு பாஷையில் படித்தது எனக்கு நியாபகத்துக்கு வருகிறது"

இது ஒரு அண்டப் புளுகு..அவனுக்கு பிரெஞ்சு பாஷையில் ஒருவரி கூட படிக்க தெரியாது.அதை அவனுக்கு எடுத்து கட்டினேன்.

"தப்பாக சொல்லுகிறாய்..இது பிரெஞ்சு கதையல்ல.ஜெர்மன் கதை.அந்த பாஷையில் தான் நான் இதை படித்தேன்.நீயும் அதில்தான் படித்திருக்க வேண்டும்."

இருவருக்கும் அந்த பாஷையில் ஓர் அட்சரம் கூட தெரியாது.அதனால் என்ன தமிழிலேயே புளுகுவதற்கு?

--கொனஷ்டை.

Wednesday, January 19, 2011

மூட நம்பிக்கை

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கிற நம்பிக்கையே 'மூட நம்பிக்கை' என்று சொல்கிற பகுத்தறிவாளர்கள் உண்டு.

அவர்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம்முடைய நம்பிக்கை மட்டும் மூடத்தனம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

நான் சொல்கிறேன் நம்பிக்கையில் மூட நம்பிக்கை,குருட்டு நம்பிக்கை,கெட்டிக்கார நம்பிக்கை எதுவும் கிடையாது.

சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே மூடத்தனம்.அதில் தனியாக ஏது மூடத்தனம்?

நாட்டு மக்கள் எல்லோரையும் நாத்திகர்களாக ஆக்கிவிட முடியும் என்று நம்பித்தான் பெரியார் பிரசாரம் செய்தார்.அந்த நம்பிக்கை எப்படி முடிந்தது?

திராவிட நாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் அந்த காலத்தில் பலர் தி.மு.க.வில் சேர்ந்தனர்.அதன் கதி என்ன?

தனுஷ்கோடி எக்ஸ்ப்ரஸில் போனவர்கள் ஊர் போய் சேரலாம் என்ற நம்பிக்கையில் தான் போனார்கள்.

அந்த நம்பிக்கை மூடத்தனம் என்பதை அரியலூர் நிரூபித்தது

நம்பிக்கை என்பது இப்படி நடக்கும் என்று ஆசைப்படுவது.அப்படி நடக்காமலும் போய் விடலாம்.அப்போது அது மூடதனமாகி விடுகிறது

மகன் கல்லூரிக்கு போகிறான் என்று நம்பித்தான் தகப்பன் பணம் அனுப்புகிறான்.அவன் அதை எப்படியும் செலவழிக்கலாம்.

இவர் நமது ஒழுங்கான பிரதிநிதியாக இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் ஒருவருக்கு வோட்டளிக்கிறார்கள்.அவர் எப்படிஎப்படியோ மாறிவிடுகிறார்.

ஆண்டவனை நம்புவதிலும் இதே நிலைதான்

அது தோல்வியுற்றால் மூடத்தனம்.வெற்றி பெற்றால் கெட்டிக்காரத்தனம்

ஆகவே நம்பிக்கை என்ற மூடத்தனம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் உண்டு.

அதில் ஆஸ்திகன் மட்டுமென்ன தனி ஜாதி!

இதுவரை எந்த நம்பிக்கை எல்லா நேரங்களிலும் பலித்திருக்கிறது?

ஆனால் நம்பிக்கை என்ற மூடத்தனத்தை ஏன் எல்லாருமே பயன்படுத்துகின்றனர் ?

அதிலே மனதுக்கு ஒரு சாந்தி!

தெய்வ நம்பிக்கை நிம்மதிக்கும் மகிழ்ச்சிக்குமாகவே ஏற்பட்டது.

விஞ்ஞான நம்பிக்கை போல ஒரு கட்டத்தில் தோல்வியுற்றாலும் மறு கட்டத்தில் வெற்றி பெறுவது தான் தெய்வ நம்பிக்கை

ஒரு சூத்திர தாரியின் கை பொம்மைகள் நாம் என்பது மறக்க முடியாதது

மரணம் என்ற ஒன்று அதை தினசரி வலியுறுத்துகிறது.

இவ்வளவுக்கும் பிறகும் தெய்வ நம்பிக்கையை சிலர் மூட நம்பிக்கை என்று சொல்வார்களானால் நான் ஒரு மூடன் என்று சொல்லிக் கொள்வதிலே பெருமை படுகிறேன்.

முட்டாள் தனத்திலே இருக்கிற நிம்மதி,கெட்டிக்காரதனதிலே இல்லை,

உடம்பில் எல்லா நோயும் இருந்தும் ஒன்றுமே இல்லை என்று நம்புகிற முட்டாள் ஆரோக்கியமாகவே இருக்கிறான்.

ஒரு நோயும் இல்லாமல் ஒவ்வொரு மயிர்காலையும் பார்த்து இது அதுவாக இருக்குமோ?இதுவாக இருக்குமோ? என்று ஆராய்ச்சி செய்கிற அறிவாளி நித்திய நோயாளியாகவே சாகிறான்.

பாம்பு நஞ்சு நிறைந்தது.வேங்கை பயரமானது.யானையின் பலத்தின் முன்னால் மனிதன் எம்மாத்திரம்?

ஆனால் அவற்றை ஆட்டி வைக்கிற திறமை சில மனிதகளிடம் இருக்கிறது.

உங்களாலும் எந்நாளும் முடியுமா? அந்த வாய்ப்பு சிலருக்கே அமைகிறது.

அதனால் தான் வாய்ப்பு இறைவன் அளிப்பது என்றேன்.அதை முறையாக பிடித்துகொண்டு முன்னேறுவதை அதிர்ஷ்டம் என்கிறேன்.

ஹிட்லருக்கு கிடைத்த வாய்ப்பு ஆணவத்தால் அழிந்தது.

சோவியத் மக்களுக்கு கிடைத்த வாய்ப்பு திறமையினால் வளர்ந்தது .

வாய்ப்பை தவறவிடுபவனே துரதிர்ஷ்டசாலி.

அந்த வாய்ப்பு எல்லோருக்கும் எப்போது வரும்?

அது முன்கூட்டியே தெரிந்து விட்டால் இறைவனை ஏன் நினைக்கப் போகிறீர்கள்!


--கண்ணதாசன்.

Sunday, January 9, 2011

ரஜினி ஒரு முதலீடில்லாத வியாபாரி !

Gbuzz இல் ரசித்த அருமையான விவாதம்... இது.

--
Dhinesh Kumar (முகிலன்) :
கமல் ரசிகர்களுக்கும் ஜெ.மோ வாசகர்களுக்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது.

இரண்டு பிரிவினருமே தாங்கள் பெரிய அறிவு ஜீவிகள் என்று (அவர்கள் ஆதர்ச ஹீரோ/எழுத்தாளரைப் போலவே) நினைத்துக் கொள்கிறார்கள். படத்தில்/எழுத்தில் ஒன்றும் புரியவில்லை என்றாலும் புரிகிற மாதிரியே நடிக்கிறார்கள்.

Delta Nathan(அது சரி) - ரஜினி ரசிகர்களுக்கும் டென்டுல்கர் ரசிகர்களுக்கும் பெரிய ஒற்றுமை இருக்கிறது. சப்பை மேட்டருக்கெல்லாம் ஆஹா ஓஹோ அய்யகோ என்பார்கள்.

Vasu Balaji - நினைச்சேன். சட்டத்த கூப்புடுவோமான்னு. :))


Sanjai Gandhi - அதுசரி, நீங்க வேற.. ரஜினி ரசிகர்கள் எப்போவும் ஒண்ணுமே இல்லாததை தான் பெரிசா பேசுவாங்க.. ரஜினி மாதிரி..6

குடுகுடுப்பை kudukuduppai - Rajni eppa பேசினார்?

Dhinesh Kumar (முகிலன்) - #உலக நாயகனே# - எல்லாமே இருக்குது பாருங்க?

aravind அரவிந்த் - பொறாமையில் பொங்கி யாருக்குமே புரியாம பதில் சொல்ற நேர்த்தி கமலுக்குத்தான் உண்டு :-))))

Sanjai Gandhi - குகு.. ரொம்ப அவசரப் படறிங்க.. பெரிசா பேசுவாங்க என்பதற்கு முன்னாடி இருக்கிறதைப் படிங்க.. ஒன்னுமே இருக்காது :)

Sanjai Gandhi - ரஜினி மாதிரி பதில் சொல்ல பயந்துட்டு இமய மலைக்கு எஸ் ஆகறத விட ரெண்டுல ஒன்னு பாக்கறது பெட்டர் இல்லையா?

Dhinesh Kumar (முகிலன்) - பதில் சொல்ல பயந்துட்டுனு எப்பிடி சொல்லலாம். சில விவாதங்கள்ல நீங்க கூட தான் இதுக்கு மேல இதைப் பத்தி பேச விரும்பலைன்னு விலகறீங்க. அப்போ நீங்களும் விவாதிக்கப் பயந்துட்டீங்கன்னு சொல்லலாமா?


Sanjai Gandhi - இதுக்கு மேலப் பேச விரும்பலைன்னு சொல்றதும் பேசவே விரும்பலைனு சொல்றதும் ஒன்னா? இதான் ரஜினிக்கும் கமலுக்கும் வித்தியாசம்.. :)

Dhinesh Kumar (முகிலன்) - ரெண்டும் ஒன்னுதான். பேசறேங்கிற பேர்ல என்னத்தையோ உளர்றதுக்குப் பேசாமலே இருக்கிறது நலம்.

Delta Nathan(அது சரி) - அன்புமணி வீட்டுக்கு போயி கண்ணாலத்துக்கு மறக்காம வந்துடுங்கன்னு கெஞ்சின ரஜினி, ரசிகனை மட்டும் மற்ந்தும் இந்த பக்கம் வந்துடாதீங்கன்னு சொல்றாரு. இது தான் ரஜினி.

Sanjai Gandhi - அன்புமணி விஐபி.. ரசிகர்கள் அப்டியா?

Tharasu mullu - I am rajini Fan - Kamal is waste

Sanjai Gandhi - ஆனால் அன்புமணி அண்ட் கோ அடிக்க வரும் போதெல்லாம் காப்பாற்ற மட்டும் ரசிகன் வேணும்..

Dhinesh Kumar (முகிலன்) - நிரந்தரமா எதிரிகள்னு யாரையாவது வச்சிக்கிட்டே இருக்க வேண்டாம்ங்கிறது முதல் மேட்டர். பொதுமக்களுக்கு இடையூறு வரவேண்டாம்ங்கிற நல்ல எண்ணம் இரண்டாவது மேட்டர். இதுல என்ன தப்பு இருக்குன்னு எனக்குத் தெரியலை.

Sanjai Gandhi - அப்டிலாம் இல்ல.. ரசிகர்கள் வந்தா விஐபிக்கள் கோச்சிப்பாங்க.. தியேட்டர்ல விசிலடிக்கவும் டிக்கெட் வாங்கி தன்னைப் பணக்காரன் ஆக்கவும் தான் ரசிகர்கள் வேணும்.. அன்புமணி, திருமாவளவனை மதிக்கலைனா படம் ஓட விடமாட்டாங்க.. அந்த பயம்..


Dhinesh Kumar (முகிலன்) - இது நீங்களா கற்பனை செஞ்சிக்கிறது. இதுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.

குடுகுடுப்பை kudukuduppai - ரஜினி என்ற மனிதர், முதலீடே இல்லாமல் பணம் சம்பாதிக்கத் தெரிந்த ஒரு வியாபாரி. பால்குடம் எடுப்பவன் பாசத்தில் செய்கிறான் என்று சொல்பவர் . அதே ரசிகனை மேலும் பால் குடம் அலகு குத்தச்சொல்லும் செயல்.

Sanjai Gandhi - இதான் ரஜினி ரசிகர்.. :)

குடுகுடுப்பை kudukuduppai - ஒரு கமல் ரசிகன் கமலை விமர்சிப்பான். எகா சுரேஷ் கண்ணன், ரஜினி ரசிகன் பால் குடம் எடுப்பான் படம் பார்க்காமலே.

Dhinesh Kumar (முகிலன்) - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது.


குடுகுடுப்பை kudukuduppai - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது.//

ரஜினி அதுல ஒருத்தரா? ரஜினி பாசத்துல செய்யுறாங்க சன் டிவில செப்புனதா ஞாபகம்.


Sanjai Gandhi - விநியோகஸ்தர் ஸ்டண்டாம்ல.. :))) என்ன இருந்தாலும் ரஜினி ரசிகர் ரஜினி ரசிகர் தான்.. :)

Dhinesh Kumar (முகிலன்) - //ஒரு கமல் ரசிகன் கமலை விமர்சிப்பான். எகா சுரேஷ் கண்ணன், ரஜினி ரசிகன் பால் குடம் எடுப்பான் படம் பார்க்காமலே//

கமல் ரசிகன் ரஜினி ரசிகனை விமர்சிப்பான். எடுத்துக்காட்டு சுரேஷ் கண்ணன்.


Dhinesh Kumar (முகிலன்) - ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை சஞ்சய்.\

Sanjai Gandhi - குகு, இதை எல்லாம் நான் நேர்லையே பார்த்திருக்கேன்.. குடம் குடமா பால் ஊத்துவாங்க..

சிவாஜி படம்(னு நினைக்கிறேன்) வந்தப்போ மதுரைல ஏராளமான ஆடு வெட்டி பிரியாணி போட்டாங்க ரசிகர்கள்..

குடுகுடுப்பை kudukuduppai - குடுகுடு - ரசிகன் எவனும் பாசத்தில் பால்குடம் எடுப்பதில்லை. விநியோகஸ்தர்கள் தங்கள் செலவில் செய்யும் ஸ்டண்ட்தான் அது//
அதிசயப்பிறவின்னு ஒரு படத்தை வெற்றிப்படமாக்க அம்பது வாட்டி சொந்தக்காசில பார்த்த பாசக்காரப்பயலுகளும் என் குடும்பத்திலே இருந்தாங்க.


Dhinesh Kumar (முகிலன்) - சன் டிவிதான் ஸ்டண்டை ஏற்பாடு செஞ்சதே. இதுல அவங்க சொல்லிக் குடுக்குற ஸ்க்ரிப்ட் படி பேசாம உண்மை விளம்பவா செய்வாங்க? சன் டிவியில செப்புனதை ஆதாரமா சொல்றாராம்ல.


Delta Nathan(அது சரி) - சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட எதுவும் செய்யாத ரஜினியும் அவரது ரசிகர் படையும்......

Sanjai Gandhi - தினேஷ்.. சவால்.. அடுத்து ரஜினி படம் ரிலிஸ் ஆகும் போது தமிழ்நாட்டுக்கு வாங்க.. பால் ஊத்தும் பாசக் காட்சியைக் காட்றேன்..\

Dhinesh Kumar (முகிலன்) - சஞ்சய், நான் பாலே ஊத்தலைன்னு சொல்லலை. ஆனா அதை ஏற்பாடு செய்யறதே ஒரு ஸ்டண்டாத்தானே ஒழிய எந்த ரசிகனும் பாசம் பீரிட்டு செய்வதில்லை.

குடுகுடுப்பை kudukuduppai - சரி தினேஷ் சன் டிவியின் ஸ்டண்டுக்கு துணை போய் ரசிகர்களை ஏமாத்தும் ரஜினி யார்? அவதாரமா?

Delta Nathan(அது சரி) - ரஜினிக்கு உண்மையிலேயே மனிதர்கள் மீது அன்பு இருந்தால் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்திருப்பார். ஆனால், துரும்பை கூட கிள்ளியதாக தெரியவில்லை. மனுசனை மதிக்காத ஆன்மீக வாதி, மயிரே போச்சு.

குடுகுடுப்பை kudukuduppai - சஞ்சய், நான் பாலே ஊத்தலைன்னு சொல்லலை. ஆனா அதை ஏற்பாடு செய்யறதே ஒரு ஸ்டண்டாத்தானே ஒழிய எந்த ரசிகனும் பாசம் பீரிட்டு செய்வதில்லை.//
உண்டு, சன் டிவி வருவதற்கு முன்னரே பால்குடம் எடுத்ததெல்லாம் பார்த்திருக்கிறேன்.


Dhinesh Kumar (முகிலன்) - நான் அவதாரம்னு சொன்னேனா? இல்லை வியாபாரி இல்லை உலகத்தைத் திருத்த வந்த உத்தமர்னு சொன்னேனா? இல்லை ரஜினி மட்டும்தான் வியாபாரியா? கலைஞர் டிவியில பேட்டிக்கு மேல பேட்டி குடுக்குற கமல் உத்தம நடிகரா? ஸ்டண்ட் அடிக்காத நடிகர்களே/அரசியல்வாதிகளே இல்லையா?

Sanjai Gandhi - http://ulavan.net/?p=4505

இத ஒருக்கா பாருங்க தினேஷ்.. இதெல்லாம் சன் டிவி ஸ்டண்டாக்கும்..

குடுகுடுப்பை kudukuduppai - சுனாமி, பாபா 1000 வருடம் அடக்கி வெச்சிருந்த மூச்சுனால வந்தது. அதனால அதுக்கு ஹெல்ப் பண்ணா பாபா கோச்சுக்குவாரு
குடுகுடுப்பை kudukuduppai - கமல் ஒரு வியாபாரிதான், ஆனா ரசிகனுக்கு பிடிக்கவில்லையென்றால் கண்டிக்கும் மனநிலையில்தான் இருக்கிறான். கமல்ஹாசன் விமர்சனத்து அப்பாற்பட்டவர் அல்ல.

குடுகுடுப்பை kudukuduppai - Dhinesh Kumar (முகிலன்) - நான் அவதாரம்னு சொன்னேனா? இல்லை வியாபாரி இல்லை உலகத்தைத் திருத்த வந்த உத்தமர்னு சொன்னேனா//

அப்படி ஒரு இமேஜ் (நல்லவர்) இமேஜ் கிரியேட் ரஜினிக்கு உருவாக்கி வெச்சிருக்காங்க, அரசியலுக்கு கூப்புடுறாங்க, அவரும் படம் வரும் முன்னாடி அறிக்கை விடுவாரு. கருப்பாயி கிழவிகளையும் உருவாக்குவார்.


Delta Nathan(அது சரி) - இனிமே ரஜினியை பத்தி பஸ் விட்டா வீட்டுக்கு கொற்கை பார்சல் பண்ணிடுவேன்.

குடுகுடுப்பை kudukuduppai - டெல்ட்டா ரஜினி ரசிகர்தான், ஆனால் அவர் விமர்சிக்கிறார், அந்தப்பக்குவம் பெரு வாரியான ரஜினி ரசிகனுக்கு வரும்போது பாபா டவுசர் வரை கிழியும்.

Delta Nathan(அது சரி) - பாபாவுக்கு இன்னுமா டவுசர் இருக்கு?
6 JanDeleteUndo deleteReport spamNot spam
குடுகுடுப்பை kudukuduppai - ஏன் சுனாமிக்கு காத்து விட்டதுல கிழிஞ்சி போச்சா?

Delta Nathan(அது சரி) - பாபா ரெண்டாயிரம் வருஷம் இருக்கலாம். டவுசர் பழசாகி கிழிஞ்சு போச்சு.

Dhinesh Kumar (முகிலன்) - //ரஜினிக்கு உண்மையிலேயே மனிதர்கள் மீது அன்பு இருந்தால் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் செய்திருப்பார். ஆனால், துரும்பை கூட கிள்ளியதாக தெரியவில்லை. மனுசனை மதிக்காத ஆன்மீக வாதி, மயிரே போச்சு//

உதவி செய்யவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் கொடுத்தது தெரியாதா?

Dhinesh Kumar (முகிலன்) - //கமல் ஒரு வியாபாரிதான், ஆனா ரசிகனுக்கு பிடிக்கவில்லையென்றால் கண்டிக்கும் மனநிலையில்தான் இருக்கிறான். கமல்ஹாசன் விமர்சனத்து அப்பாற்பட்டவர் அல்ல//

ரஜினி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று நான் சொன்னேனா? ரஜினியின் படைப்பு வருகிறதென்றால் அந்தப் படைப்பை விமர்சிக்க வேண்டுமே தவிர ரஜினி என்ற தனி மனிதனை விமர்சிக்கக் கூடாது என்பதே நான் எடுத்து வைத்து வந்த, வைத்துக் கொண்டிருக்கும், இனியும் தொடர்ந்து வைக்கும் வாதம்.

Dhinesh Kumar (முகிலன்) - //இனிமே ரஜினியை பத்தி பஸ் விட்டா வீட்டுக்கு கொற்கை பார்சல் பண்ணிடுவேன்.//

நல்லாப் பாருமய்யா இது ரஜினி பஸ்ஸா?? கமலைப் பத்தி விட்டா உங்களுக்குத்தான் பத்திக்கிட்டு வந்து ரஜினி ரஜினின்னு காத்து வுட்டுட்டு இருக்கீங்க..

Dhinesh Kumar (முகிலன்) - //சுனாமி, பாபா 1000 வருடம் அடக்கி வெச்சிருந்த மூச்சுனால வந்தது. அதனால அதுக்கு ஹெல்ப் பண்ணா பாபா கோச்சுக்குவாரு//

கமல்தான் கடலுக்கு அடியில போன பெருமாளால சுனாமி வந்துச்சின்னு கதை வுட்டாரு. ரஜினி எப்ப இப்பிடிச் சொன்னாரு?

Dhinesh Kumar (முகிலன்) - //டெல்ட்டா ரஜினி ரசிகர்தான், ஆனால் அவர் விமர்சிக்கிறார், அந்தப்பக்குவம் பெரு வாரியான ரஜினி ரசிகனுக்கு வரும்போது பாபா டவுசர் வரை கிழியும்.//

டெல்டா ரஜினி ரசிகரா?? ஹாஹாஹாஹாஹாஹாஹாஹா...

ஜினியின் படைப்புகளை விமர்சிக்கும் பக்குவம் ரஜினி ரசிகனுக்கு எப்போதோ வந்துவிட்டது. அப்படி வரவில்லையென்றால் பாபாவும், குசேலனும் இருநூறு நாள் ஓடியிருக்கும்.

குடுகுடுப்பை kudukuduppai - http://kudukuduppai.blogspot.com/2008/12/blog-post_11.html
இந்த பதிவில அது சரி கமெண்ட் படிங்க

Dhinesh Kumar (முகிலன்) - அது வஞ்சப் புகழ்ச்சி ஐயா

Tuesday, December 14, 2010

தேர்தலில் யாருக்கு வோட்டு போடுகிறீர்கள்?-சில டிப்ஸ்

தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவதாக தீர்மானித்திருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. உங்கள் குழப்பத்தோடு என் குழப்பத்தையும் சேர்க்க விருப்பம் இல்லை. ஆனால் ஓட்டு போடுவது முக்கியம். காரணம் ஏதோ ஒருவிதத்தில் இந்த அதிசய ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தை (அல்லது கோபத்தை ,வெறுப்பை) தெரிவிக்க முடிகிறது. தமிழ்நாட்டை எடுத்துகொள்ளுங்கள். அதன் நிதர்சனங்கள் இவை.

சட்டப்பேரவையில் எதாவது ஒரு திராவிட கட்சிதான் ஆட்சிசெய்ய முடிகிறது.
ஊழலிலோ, அசாதனைகளிலோ, இருவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.

வேட்டிக்கரையை உற்றுப்பார்த்தால் வித்தியாசம் தெரிகிறது

அதனால் தான் தமிழ் நாடு எப்போதும் ஜராசந்த வதம் மாதிரி புரட்டிப் புரட்டி போட்டு இவர் போதும் அடுத்து நீ வாய்யா..நீ வந்து சுரண்டு.முதல் வருஷமாவது மக்களுக்கு எதாவது செய். என்று மாற்றுகிறார்கள். இடையே சினிமா நடிகர்கள் குட்டையை குழப்பினாலும் நெகடிவ் ஓட்டு என்பது தமிழ்நாட்டின் தேர்தல் பழக்கமாகிவிட்டது.

மத்திய அரசை பொறுத்தவரை அதன் தலைவிதியை நிர்ணயிப்பது உ.பி.முதலான இந்தி வளையமும், பசுமாடும் தான். அ.தி,மு.க., தி.மு.க. இருவரும் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்த பழைய புராணங்களை புரட்டினால் தலை சுற்றி உடனடியாக ஒரு லிம்கா அடிக்க வேண்டும். சேராமல் சேர்ந்து , விலகி, மீண்டும் சேர்ந்து ,விலகிய இந்த விளையாட்டில் யாருக்கு போட்டாலும் ஏமாறப்போவது மக்கள்தான்.

இதனால் தேர்தலை படித்தவர்கள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நடுத்தர மேல்தட்டு வர்க்க மக்கள். ஏழைகளை குஞ்சாலாடு, மூக்குத்தி, வேட்டி-சேலை, பக்கெட் பிரியாணி என்று எதாவது கொடுத்து போட வைத்து விடுவார்கள். நடுவாந்திரம் தான் ஓட்டு போடுவதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து நகம் வெட்டிக்கொண்டே எஃப் டிவி பார்த்துகொண்டிருப்பர்கள் . அதனால் வோட்டுசாவடிக்கு போக கஷ்டப்பட மாட்டார்கள். அதை மட்டும் செய்யாதீர்கள்.

ஐ.டி.கார்டு இல்லையென்றாலும் வோட்டு போடலாம்..போட வேண்டும். யாருக்கு என்றால் கீழ்காணும் காப்பிரைட் செய்யப்பட்ட என் சொந்த குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

1 . இருப்பதற்குள் இளைஞர்,அல்லது அதிகம் படித்தவர்க்கு வோட்டு போடுங்கள். சாதி பார்க்காதீர்கள். உங்கள் சாதி என்றால் ஒரு பரிவு உணர்ச்சி இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த ஆள் முகத்தை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா, யோசித்து பாருங்கள். டிவியில் பார்த்தால் போதாது. உங்கள் தொகுதிக்காரரா அல்லது வெளியில் இருந்து விதைக்கப்பட்டவரா என்று பாருங்கள்.

2 . உங்கள் தீர்மானம் திடமாக இருந்தால் இன்னாருக்கு இன்ன காரணத்துக்காக ஓட்டு போடுகிறேன் என்பதை சுற்றுப்பட்டவர்களுக்கும் சொல்லுங்கள். உங்கள் மனைவி,மக்கள்,டிரைவர் ,வேலைக்காரி ,அல்சேஷன் எல்லாருக்கும் சொல்லலாம்.

3 . யாருக்கு என்று தீர்மானிக்காத பட்சத்தில் உங்கள் வீட்டுக்கு முதன்முறையாக வந்து வோட்டு கேட்டவருக்கு போடுங்கள். தலையையாவது காட்டினாரே !

4 . உங்கள் தொகுதியில் பெண்கள் போட்டியிட்டால் அவர்களுக்கு போடுங்கள். முப்பது விழுக்காடு என்று ஜல்லியடித்துகொண்டிருக்கிறார்கள்.ஆணாதிக்க இந்தியாவில் அது வரவே வராது. பெண்கள் குறைந்த பட்சமாவது ஆதரிக்கப்பட வேண்டியவர்கள். அலங்காரத்துக்கு நிற்கும் நடிகைகளை தவிர்க்கவும்

5 . இதற்கு முன் இருந்தவர் மறுதேர்தலை விரும்பினால் அவர் ஆட்சிகாலத்தில் எப்போதாவது ஒரு முறையாவது உங்கள் தெருப்பக்கம் தலையை கட்டியிருக்கிறார் என்றால் அவருக்கு போடலாம். எனவே போடுவதற்கு முன் முகம், அவர் கட்சி வேட்பாளராக இருந்தால் அந்த கட்சியின் சென்ற தேர்தல் வாக்குறுதிகளை ஒரு காப்பி பிரதி வைத்து கொள்ளவும். அதை காட்டி ''இதில் நீங்கள் என்னென்ன செய்திருக்கிறீர்கள்? '' என்று கேட்டாலே பாதி பேர் மறைந்துவிடுவார்கள்.யாராவது நிலையான ஆட்சி என்று சொல்லிக்கொண்டு வந்தால் நாயை அவிழ்த்து விடுங்கள். இந்தியாவில் நிலையான ஆட்சி என்பது இனி சாத்தியம் இல்லை.

6 .சுயேச்சைகளுக்கு போடாதீர்கள்.வேஸ்ட்.

7 .கொஞ்ச நாள் தையா தக்கா,ஆட்டம் பாட்டம், சிக்கு-புக்கு ,முக்காபுலா, போன்ற அறிவு சார்ந்த ப்ரோகிராம்களை புறக்கணித்து பிரணாய் ராய்,ரபி பெர்னாட் நடத்தும் தேர்தல் நிகழ்சிகளை பாருங்கள். ஒவ்வொரு கட்சி வேட்பாளரும், அல்லது தலைவரும் டிவியிலாவது விவாதங்களில் தோன்றலாம்.

இருப்பதற்குள் திருட்டு முழி முழிக்காதவராக , யாரை பார்த்தால், இவர் எதாவது செய்வார்,முதல் நாளே உள்ளங்கை அரிக்காது என்று உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதோ அவருக்கு போடலாம். (அமெரிக்கா இப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது )அல்லது கோர்வையாக பத்து வார்த்தைகள் பேச தெரிந்திருந்தால் போடலாம்.

இவ்வளவு செய்தும் ஒன்றுமே தீர்மானிக்க முடியவில்லை என்றால் சீட்டு எழுதி வீட்டில் யாரையாவது தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அதிர்ஷ்டமுள்ளவர் வெல்லட்டும்.ஆனால் கட்டாயம் வோட்டு போடுங்கள். அது அவசியம்.

பார்லிமென்ட் தொங்கினாலும் நொண்டினாலும் பரவாயில்லை. சண்டை வந்தால் விட்டுகொடுப்பது இல்லை. மேலும் முதன்முதலாக இந்த கோமாளிகள் பரஸ்பரம் கவிழ்த்து கொண்டு ,மரமேஜைகளை தட்டி வெளியென்ற விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கும் போது நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் பத்திரமாக இருக்கிறது.அது முன்னேற்றத்துக்கான அறிகுறி.அது இப்போது மனிதர்களை சாராமல் பருவ மழையை மட்டும் சார்ந்துள்ளது. பருவ மழையும் இத்தனை பாவாத்மாக்கள் இருந்தும் தவறாம பெய்கிறது.

தயவு செய்து வோட்டு போடுங்கள். 'டாமினோ எஃபெக்ட்' என்று ஒன்று உள்ளது.அதன் மூலம் உங்கள் ஒற்றை ஓட்டை வைத்துகொண்டு இந்த தேசத்தின் தலைவிதியை படித்தவர்களால் மாற்ற முடியும். jokes apart.please vote.its your sacred duty.

--சுஜாதா


Thursday, December 2, 2010

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் - சுஜாதா

Things you would never know without the movie industry.. என்று என் ஆஸ்தான எழுத்தாளர் சுஜாதாவிற்கு வந்த மின்னஞ்சல் ஒன்று. ஹாலிவுட் சினிமாக்களில் தான் இவை எல்லாம் பார்க்கலாம் என்று ஒரு பட்டியலே இருக்கிறது.


1 . என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக தான் இருக்கும்.

2 . இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர்

3 . பாம் வெடிப்பதை தடுக்க வேண்டும் எனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.

4 . எவ்வளவு பேர் கதாநாயகனை தாக்க வந்தாலும் ஒவ்வொருவராகத்தான் வந்து உதைபடுவார்கள்.

5 . அதுவரை மற்றவர் உதைபட தங்கள் முறை வரும் வரை சுற்றிலும் நடனமாடிக் கொண்டிருப்பார்கள்.

6 . ராத்திரி படுத்துக் கொள்ளும் போது பெட்ரூம் விளக்கை அனைத்தாலும் அறையில் எல்லாம் நன்றாக தெரியும். என்ன, கொஞ்சம் நீலமாக தெரியும்....அவ்வளவுதான்

7 அழகான இருபத்திரண்டு வயது கதாநாயகி அணுஆயுத நியூக்ளியர் ரகசியங்களிலும் கம்ப்யூட்டரிலும் எக்ஸ்பெர்டாக இருக்க முடியும்

8 விசுவாசமுள்ள , கடுமையாக உழைக்கும் போலீஸ் அதிகாரி ரிட்டையர் ஆவதற்கு பத்து நாள் முன்பு சுட்டுகொள்ளப்படுவார்

9 வில்லன் கதாநாயகனை நேரடியாக சுட்டு கொள்வதற்கு பதில் சிக்கலான இயந்திரங்கள், பியூஸ்கள் , விஷவாயுக்கள், சக்கரங்கள், லேசர் அல்லது சுறாமீன்களிடம் விட்டு விட்டு சுற்றி வளைத்து தான் கொல்வான். நாயகன் தப்பிக்க முப்பது நிமிஷமாவது கிடைக்கும்

10 போலீஸ் விசாரணையின் போது கட்டாயமாக ஒரு நைட் க்ளப்பில் போய் விசாரித்தாக வேண்டும். பின்னால் மழுப்பலாக ஒரு ஸ்ட்ரிப் டீஸ் தெரிய வேண்டும்

11 எல்லா படுக்கைகளிலும் ஸ்பெஷலாக போர்வைகள் உண்டு. பெண்களுக்கு மார்பு வரை மறைக்கவும், ஆண்களுக்கு இடுப்பு வரை மறைக்கவும் (ஆண்கள் அப்போது சிகரெட் குடுத்தே ஆக வேண்டும்)

12 . யாராயிருந்தாலும் ஒரு விமானத்தை தரையிறக்க முடியும். கண்ட்ரோல் டவரிலிருந்து எப்போதும் சிகரெட் குடிக்கும் ஆசாமி பேசியபடியே இறங்க வைப்பான்.

13 . தண்ணீருக்கடியில் போனாலும் லிப்ஸ்டிக் அழியாது.

14 . எந்த யுத்தமாக இருந்தாலும் காதலியின் போட்டோவை காட்டாதவரை நாயகன் இறக்க மாட்டான். எடுத்து காட்டி விட்டால் அடுத்த காட்சியில் அவன் க்ளோஸ்

15 . பாரிஸ் நகரில் எந்த ஜன்னலில் இருந்து பார்த்தாலும் ஈபில் டவர் தெரியும்

16 . கதாநாயகன் வில்லனிடம் செமையாக அடி வாங்கும் போது வலி தெரியவே தெரியாது. ஆனால் நாயகி பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் 'ஸ்ஸ்... ஆ...' என்பான்

17 . ஒரு பெரிய கண்ணாடி காட்டப்பட்டால் அதன் மீது யாராவது தூக்கி வீசி எறியப்படுவார்

18 . காரில் நேரான ரோட்டில் நேராக போனாலும் நாயகி அடிக்கடி ஸ்டியரிங்கை திருப்புவாள்.

19 . எல்லா 'டைம் பாம் 'களிலும் வெடிக்க எத்தனை செகண்ட் பாக்கி இருக்கிறது என தெரிந்தே ஆக வேண்டும்

20 . போலீஸ் அதிகாரியை சஸ்பென்ட் பண்ணதும் தான் கேசை துப்பு துலக்க தேவைபடுவார்.

21 . தெருவில் நீங்கள் நடனமாட தொடங்கினால் தெருவில் வரும் போகும் எல்லோரும் அதே தாளத்தில் ஆடுவார்கள்.

22 .பாழடைந்த பங்களாவில் தங்கும் பெண்கள் எதாவது வினோத சத்தம் கேட்டால் என்னவென்று பார்க்க சிக்கனமான உடையில் தான் நடந்து செல்வார்கள்.

23 .போலீஸ் அதிகாரிகளும் அவர்களுடைய உதவியாளர்களும் எப்போதும் நேர்மாறான குணமுள்ளவர்களாகத்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

24 .ரஷ்ய அதிகாரிகள் ரஷ்யாவில் தங்களுக்குள் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொள்வார்கள்



இவை பெரும்பாலும் நம் பாலிவூட், கோலிவூட் சினிமாக்களிலும் பொருந்துவதை நீங்கள் இது நேரம் உணர்ந்திருப்பீர்கள். கோடம்பாக்கத்துக்கு 24 க்கு மேல் அனுபந்தமாக சில விஷயங்கள் உண்டு.

25. உணர்ச்சி வசப்படும் காட்சியில் திடீர் என்று மின்னல் வெட்டி மழை வந்தே ஆக வேண்டும். நாயகி வீட்டை விட்டு துரத்தப்படும் போது , டூயட்டின் போது, காதலின் போது எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம். மழையின் போது மட்டும் எப்போது அவள் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் புடவை அணிய வேண்டும்

26 .பாடல் காட்சியில் ஒரு வரி மயிலாப்பூரிலும் அடுத்த வரி மியாமியிலும் பாடப்படலாம்

27 .ஒரே பாட்டில் பாடிக்கொண்டிருக்கும் போது உடை மாறலாம். நிறம் மாறலாம்.

28 .சட்டென்று எல்லா பிஜிஎம்மும் நின்று விட்டால் யாரோ செத்து போய்விட்டார்கள் என்பது உறுதி.

29 .கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்த கட்டத்திலும் நுழைந்து உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றவாறும் சாட்சி சொல்லலாம்.

30 .'முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ணை வரசொல்லுங்கோ' என்று குடுமி சாஸ்திரி அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போக போகிறாள் என்று அர்த்தம்.

31 இறுதியாக பாடலின் எந்த காட்சியிலும் எந்த வேளையிலும் எந்த லோகேஷனிலும் நாற்பது பெண்கள் வரலாம்.எல்லாரும் குட்டை பாவாடை அணிய வேண்டும்



இந்த வரிசையில் இன்னும் எதாவது விட்டு போயிருக்கிறதா?

Tuesday, October 19, 2010

பகுத்தறிவு - கண்ணதாசன்


கண்ணதாசனின் 'கடைசி பக்கம்' புத்தகம் படிக்க கிடைத்தது. பகுத்தறிவு பற்றி அவர் சொல்லிய அருமையான கருத்துக்கள்...

---

பகுத்தறிவு உலகத்தை மாற்றி அமைத்தது.

காற்றில்லாத வீடுகளுக்குள்ளே மனிதர்கள் அடைபட்டு கிடந்த காலம் போய், சொகுசான ஒரு காலத்தை பகுத்தறிவு கொண்டு வந்தது.

உட்கார்ந்த இடத்திலேயே காற்று,படம்,ஒலி, ஒளி, செயற்கை மழை போன்ற ஷவர் பாத்; சிங்கார வாகனங்கள்; செவ்வாய் கிரகனதுக்கே பயணம் செய்ய கூடிய எல்லாவற்றையும் விஞ்ஞானம் நமக்கு கொடுத்ததற்கு காரணம் பகுத்தறிவுதான். அணுவை பகுத்து அதன் அளப்பரிய சக்தியை கண்டு பிடித்த அறிவு. உண்மையிலேயே அற்புதமான அறிவுதான்.

அந்த பகுத்தறிவு, அதிலே இது உண்டு. இதிலே அது உண்டு. என்று காட்டிற்றே தவிர, எதையும் 'இல்லை இல்லை' என்று சொல்ல முயன்றதில்லை.

ஆனால், நமது ஊர் பகுத்தறிவோ, அது இல்லை, இது இல்லை; அது பொய்' என்று சொல்ல முனைந்ததே தவிர, எதிலே எது அடக்கம் என்று கண்டு கொள்ளக்கூடியதாக இல்லை.

ஒரு பகுத்தறிவாளர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

''அய்யா, 'சிவாய நமவென்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்கிறார்களே, 'சிவாய நம' என்று சொல்லிக்கொண்டே ஆயிரம் வால்ட் மின்சாரத்தை தொட்டால் அபாயம் ஏற்படாதா?''

__என்று கேட்கிறார்.

நல்லது. அபாயம் ஏற்படத்தான் செய்யும்.

கொஞ்சம் அறிவோடு ஆராய்ந்தால் விஷயம் விளங்கும்.

அந்த பாடலை பாடிய அடியவர் ' 'சிவாய நமவென்று மின்சாரம் தொடுவோர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை' என்று சொல்லவில்லை. 'சிந்தித்திருப்போர்க்கு' என்று தான் சொன்னார்.

அவர் சிந்தனையை சொன்னாரே தவிர செயலை சொல்லவில்லை.

கடிதம் எழுதியவர் மீது குற்றமில்லை. எல்லாம் நம்ம ஊர் பகுத்தறிவு படுத்தும் பாடு.

நம்ம ஊர் பகுத்தறிவு ஓர் அழகான பெண்ணை கண்டால் அவளது அழகையோ, பண்பையோ சிந்திப்பதில்லை. அவளுடம்பில் எத்தனை வீசை கறி, எத்தனை வீசை எலும்பு என்றுதான் ஆராயும்!.

'மனதைப் பகுத்தறியலாம்;உடம்பை பகுத்தறியலாமா?என்றுகூட யோசிப்பதில்லை!

இந்து மத தத்துவங்கள் எடுத்த வேகத்தில் பிடித்து வைத்த பொம்மைகளில்லை. பகுத்து பகுத்து அறிந்த பின்பே உருவாக்கப்பட்டவை.

ஒன்பது ஓட்டைகள் இருந்தும் , உடம்புக்குள்ளே ஒரு காற்று எந்த சக்திக்கு கட்டுப்பட்டு நீண்ட காலம் வெளியேறாமல் நிற்கிறது?

விஞ்ஞானிகளே யோசிக்கும் இடம் இது .

ஆனால், நம்ம ஊர் பகுத்தறிவு இதை யோசிக்காது. 'இது இயற்கையாகவே நிற்கிறது ' என்று சொல்லும்.

எது அந்த இயற்கை ?

மண்ணா ?.. மரமா ?. செடியா ..? கொடியா ..?

இப்போது மேல்நாட்டு விஞ்ஞானிகள் உடம்பில் இருந்து வெளியேறும் உயிர் எவ்வளவு வேகத்தில் வான மண்டலத்துக்கு பயணமாகிறது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வெளியேறும் உயிரின் வேகம்தான் ஆராய்ச்சியில் இருக்கிறதே தவிர , அது வெளியேறாமல் இருக்கும் வழி அவனுக்கும் தோன்றவில்லை ; அடுத்த தலைமுறைக்கும் தோன்றவில்லை.

மானிட சக்திக்கு மேற்ற்பட்ட மூலத்தை புகழ் பெற்ற விஞ்ஞானிகளே மறுத்ததில்லை .

சந்திர மண்டலத்து பயணிகள் சர்ச்சுக்கு போய்வந்து தான் பயணமானார்கள் .

ஞானம் என்ற மூலத்திலிருந்துதான் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டுமே தோன்றின .

இரண்டுமே ஒரு மூலத்தை நம்புகின்றன.

'சுடு 'என்று சொன்னவுடனே யாரை சுடுகிறோம் என்று பார்க்காமலே சுடுகின்ற படைகள்தாம் நாட்டுக்கு

வெற்றி தேடி தந்திருக்கின்றன.

அதே நேரத்தில் படைகள் பகுத்தறிவை உபயோகிக்கத் தொடங்கினால், பகுத்தறிவு மிஞ்சும் . நாடு மிஞ்சாது.

'போரில் தயக்கம் காட்டிய அர்ஜுனனைப் பார்த்து கண்ணன் அதை தான் சொன்னான்.

'போர் என்று வந்தபின் உறவினர்கள் என்ற ஆராய்ச்சி வெற்றிக்கு உதவாது ' என்றான்.

கடைசியில் கண்ணன் மீது மூடநம்பிக்கை வைத்து அர்ஜுனன் காண்டீபத்தை தூக்கினான் ; முடிவு வெற்றியாக கனிந்தது .

கீதையில் கர்மயோகம் மானிடக் கடமைகளை வலியுறுதுகின்றது .

பக்தி யோகம் தியானத்தை வலியுறுத்துகிறது .

கடமையும் நம்பிக்கையுடன்தான் நடை பெறுகிறது ; தியானமும் நம்பிக்கையுடன்தான் நடைபெறுகிறது .

'மனம் உண்டானால் வழி உண்டு' என்பது பெரியோர் வாக்கு .

அது மானிட தர்மத்துக்கும் பொருந்தும் .

ஆகவே தெய்வ நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று சொல்வதை பற்றி நான் வருந்தவில்லை.

''இந்த மூடனும், அந்த அறிவாளியும் நம்மிடம் தான் வரப் போகிறார்கள் '' என்ற நம்பிக்கை தெய்வத்துக்கு இருக்கிறதே , யார் என்ன செய்ய முடியும் !.

Saturday, October 2, 2010

பெண்ணை பலிகொடுக்கிற விழாதானே திருமணம்..?


நண்பரின் ஓயாத பரிந்துரை காரணமாக நூலகத்தில் பெரியாரின் பக்களின்பால் தலையை திருப்பவேண்டியதாயிற்று.

அப்போது ஒரு நூலில் பெரியாரின் கருத்து அருமையாக இருந்தாதால் இங்கே..

''திருமண முறையானது காட்டுமிராண்டி காலத்தில் அதாவது, 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். அதை மனிதன் இன்றைக்கும் எதற்காக கடைபிடிக்க வேண்டும்? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே திருமணம் நடைபெறுகிறது. கோயிலுக்கு எப்படி மிருகங்களை பலி கொடுக்கிறார்களோ அதைப்போலவே பெண்களை பலிகொடுக்கிறார்கள்.

அந்த நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியான பெண்கள் இனத்தை எதுக்காக இப்படி கொடுமைபடுத்த வேண்டும்.? இந்த திருமண முறை சுய நலத்திற்காகவே ஒழிய பொதுநலத்திற்காக அல்லவே. புருஷனுடைய வேலை பொண்டாட்டியை பாதுகாப்பதும், பொண்டாட்டி புருஷனை பாதுகாப்பதும், இருவருக்கும் குட்டிகள் ஏற்பட்டால் அவற்றை இரண்டு பேருமே சேர்த்து காப்பாற்றவும் தான் பயன்படுகிறதே தவிர சமுதாயத்திற்கு அல்ல.

அடுத்த வீடு நெருப்பு பிடித்தாலும் அதைப்பற்றி கவலை பட மாட்டான். ஒரு வாளி தண்ணீர் கொடுப்பான். ஆனால் அதுவே அவன் வீட்டுக்கு தீ பரவாது இருக்கட்டும் என்பதற்காகவே ஆகும். ஆண்களும் பெண்களும் இதன்கைய தொல்லையில் மாட்டிகொள்ளாமல், படித்து ஆராய்ந்து விஞ்ஞான அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து மேன்மை அடைய வேண்டாமா? அத்தனை அடுத்து புருஷன் பொண்டாட்டியோடு தனிக்குடித்தனம், தனிச்சமையல் என்று ஆக்கிக்கொண்டு பொது நல உணர்ச்சி அற்றவர்களாகவே ஆகிவிடுகிறார்கள்.

உலகம் வளர்ச்சியடைய வேண்டுமானால் உலகம் தொல்லையில்லாமல் சுபிட்சம் அடைய வேண்டுமானால், திருமணம் என்பதை கிருமினல் குற்றமாக்கி விட வேண்டும். இன்று இல்லாவிட்டாலும் அது வந்தே தீரும். சம எண்ணிக்கை உடையதும் சம உரிமைகளை பெற வேண்டியதுமான ஜீவன்களை இப்படி கொடுமை படுத்துவது மிகவும் அக்கிரமமாகும்.

ஒரு பெண்ணாக பார்த்து ஆணை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டுமே ஒழிய பெற்றோர்கள் குறுக்கிட கூடாது.''

இவ்வாறு சொல்லி இருக்கிறார்

எவ்வளவு உண்மையான கருத்து. அவருடைய மற்ற கருத்துகள் பிடித்திருக்கிறதோ இல்லையோ இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்து விட்டது.

இன்னொரு பிரபல வாக்கியம் நினைவிற்கு வருகிறது..

''ஆண்களோடும் வாழ முடியாது.
அவர்கள் இல்லாமலும் வாழ முடியாது''

Monday, August 30, 2010

நவ நாகரீக ஆதிமனிதன்

சாருவின் சென்ற வார 'மனம் கொத்தி பறவை' படித்து விட்டு மனம் ஒரு மாதிரி தான் ஆகி விட்டது. பல்வேறு நாடுகளின் அசைவ உணவுகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சைவப்பிரியர்கள் மனதை கல்லாக்கி கொண்டு மேற்படி படியுங்கள் என்று நாய்க்கறி பற்றியும், வட மாநிலங்களில் நாய்க்கறி முக்கிய விருந்தாக பரிமாறப்படுவது பற்றியும், உலக நாடுகளில் நாய்க்கறி முக்கியமான ஒன்று எனவும், சமைக்காத பச்சை மீன் உணவுகளை ஜப்பானில் சாப்பிடுவதையும், ஏதோ ஓரிடத்தில் தான் சாப்பிட்ட தவளைக்கறியின் லெக் பீஸிற்கு சிக்கன் லெக் எல்லாம் இணையே ஆகாது எனவும் எழுதி இருந்தார்.

நான் கூட travel & living சேன்னலில் பல முறை பார்த்திருக்கிறேன். ஜப்பானோ , சீனாவோ போன்ற தோற்றத்தில் ஒரு பெண் சமையலுக்கு வருவார். அவர் ஆச்டோபஸ்ஸை அப்படி சுடு தண்ணீரில் போட்டு எடுத்து லேசாக வால்பகுதிகளை மட்டும் நீக்கி விட்டு மேசையில் கொண்டு வந்து பரிமாறுவார். அப்படியே பச்சையாக இருக்கும்.

பெரிய வண்டு போன்ற தோன்றமுடிய ஜந்து, கடல் குதிரை, தவளை, மற்றும் பூசியினங்களை அவற்றை வேக வைத்தார்களா இல்லையா என்றே தெரியாது. தோன்றம் மாறாமல் அப்படியே முள்கரண்டியை குதிக்கொண்டிருப்பர்கள். அதன் கண்கள் வெறித்து பார்ப்பதை எல்லாம் அவர்கள் சட்டை செய்வது போல இல்லை.

ஒருமுறை ஒரு ஆசாமி மேசையில் ஒரு ஆமையை கொண்டு வந்து வைத்தார். அது தன் தலை, கை, கால்களை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஓடு மட்டும் தான் தெரிந்தது. அந்த மனிதன் பள பளக்கும் கத்தியால் ஓட்டின் அடிப்பகுதியை குத்தினான். அந்த ஆமை உடனே தலையை வெளியே நீட்ட,அவன் சடார் என தலையை பிடித்து விட்டான். பிறகு அந்த கத்தியை கொண்டு தலையை வெட்ட போக.. எனக்கு அதற்கு மேல் பார்க்க முடியாமல் சேன்னலை மாற்றி விட்டேன். சிறிது நேரம் கழித்து வந்தால், அந்த ஆமை மசாலாக்களுடன் பரிமாறப்பட்டிருந்தது. ஒரு சில தட்டிக்களில் தலை, கால், ஓடுகளுடன் அப்படியே சமைத்தும் வைத்திருந்தார்கள். அதன் கண்கள் வேறு ஒரு மாதிரி இருக்க, ஓட்டை நீக்காமல் எப்படி சாப்பிடுகிறார்கள் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

அதேபோல மற்றொரு முறை பாம்பின் தோலை உரிந்துக்கொண்டிருந்தார்கள். போதுமடா சாமி என அந்த நிகழ்ச்சியை பார்பதையே விட்டு விட்டேன்.

நடிகை ஏஞ்சலினாவின் அழகின் ரகசியத்திற்கு காரணம் அவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்படும் கரப்பான் பூச்சியை சாப்பிடுவது தானாம். பத்திரிக்கை செய்தி எந்த அளவு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையிலேயே அவர் சாப்பிடுவாரோ?

சாரு சொன்னா மற்றொரு செய்தி அசைவப்பிரியர்களையே வாந்தி வரச்செய்து விடும். ஜப்பானியர்களை பார்த்து மிக அருவருப்பாகி விட்டது எனக்கு.

ஜப்பானிய வி.வி..பி.க்களுக்கு மட்டும் நடக்கும் முக்கிய விருந்து நிகழ்ச்சியை பற்றி சொல்லி இருந்தார். அந்த விருந்தில் சினையாக இருக்கும் மாட்டின் வயிற்றில் இருக்கும் 4 அல்லது 6 மாத குட்டியை வெளியே எடுத்து அதன் மேல் ஏதோ சிலவற்றை தூவி ஏதோ முறையில் சுடவைத்து அப்படியே மேசையில் கொண்டுவந்து வைத்தார்களாம். அதன் தலை ஒரு ஜப்பானிய உயர் அதிகாரிக்கு வைக்கப்பட்டதாம். அவர் அதன் மேல் ஸ்பூனை குத்த இதம் பீறிட்டு வந்திருக்கிறது. மற்ற யாவரும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்க, நம் சாருவின் நண்பர் பொறுக்க முடியாமல் '' என சொல்லிவிட்டாராம்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்து அவர்களை தனியே அழைத்து ''நாங்கள் இதை சாப்பிட்டு என்ன செத்தா போய் விட்டோம். இந்தியர்களாகிய நீங்கள் கலாச்சாரம் கற்பு என வெறும் வாய்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நடைமுறையில் அப்படியா இருக்கிறீர்கள்'' என பொரிந்து தள்ளி இருக்கிறார்.

அவர்சொல்வது ஓரளவு உண்மையும் கூட. நாம் நாட்டில் அவை வெறும் மேடை பேச்சாக மட்டுமே இருக்கிறது.

நம் நாட்டிலும் மாடு, ஆடு, நாய், பன்றி என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை தான். சென்னையிலும் , கேரளா போகும் பாதைகளிலும் மாட்டுக்கறி சந்தைகளே உள்ளது. ஒரு முறை சென்னையில் மாடுகளை நம்மவர்கள் செய்த சித்ரவதைகளையும், கடைகளில் இருந்த ரத்த வெள்ளத்தையும், துடிக்க துடிக்க அவற்றை இழுத்து சென்றதையும் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக போட்டுகொண்டிருந்தார்கள்.

நம் ஊரில் ஒன்றும் குறைச்சலில்லை நான் அவர்களை பார்த்து அருவருப்படைய. இருந்தாலும் பசுவாயின்றே , அதுவும் சினை, அதன் குட்டி என படித்து விட்டு இரண்டு நாட்கள் எனக்கு துக்கமே வரவில்லை.

ஒரு கவிதையை நினைத்து தேற்றிக்கொண்டேன்.

''கொல்வது பாவம் எனில்
அணில் என்ன?
எலி என்ன?''

எலிக்கு பொறி வைத்துவிட்டு அணில் மாட்டிக்கொள்ள கூடாது என பிரார்த்தித்தால் அப்போது எலி ஜீவன் இல்லையா?

ஆதிமனிதர்களுக்கும் நவ நாகரீக மனிதர்களாகிய நமக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை போல தான் தெரிகிறது உணவு விஷயத்தில்..

Thursday, August 26, 2010

உலகின் மகிழ்ச்சியான நாடு எது?



கடந்த 2005 முதல் 2009 வரை 155 நாடுகளில் ஒரு சர்வதேச நிறுவனம் எடுத்த சர்வே இது. அந்த பட்டியலில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு நெதர்லாந்து தான். டென்மார்க், பின்லாந்து , நார்வே, ஸ்வீடன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நம்ம அமெரிக்கா முதல் 10 இடங்களில் கூட வரவில்லையாம்.

''பணம் மட்டும் மகிழ்ச்சியை தராது. மற்ற வசதிகள், அமைதியான சூழ்நிலைகள் தான் மகிழ்ச்சியை தரும் '' என இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

சரி.. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் நிலைமை என்னவாம்?

இந்த கணக்கெடுப்பு பட்டியலில் (155 நாடுகளில்) இந்தியா இடம்பெறவே இல்லையாம் !..

அப்போ இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்று முடிவே கட்டிவிட்டார்களா ?! . அப்படியெனில் நாம் எல்லாம் சகிப்புத்தன்மை கொண்ட 'தியாகிகள்' தானே ! எப்பேர்ப்பட்ட மக்கள் நாம். !

உலகிலேயே சிறந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும், ஞாபக மறதியும் கொண்ட, மக்களை கொண்ட நாடு 'இந்தியாதான்'. ஒந்த சான்றிதழையாவது யாரேனும் கணக்கெடுத்து கொடுத்தால் தேவலை.

இன்னொன்றும் தோன்றுகிறது. இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்றால் நமது தேசப்பற்றிற்கு கோபம் வருகிறதே. நம்மை மட்டம் தட்டியது போல ஆகாதா..?

ஆனால் கண்டிப்பாக நமது நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் கூட்டம் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. நமது மாண்புமிகு 'அரசியல்வாதிகள்தானே!'

ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு டீம் கால்பந்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அணி ப்ளேயர்கள் சோனியா, மன்மோகன் , ஜெயலலிதா, மம்தா, கருணாநிதி, லல்லு, வாஜ்பாய், அத்வானி, இப்படி போகிறது. அவர்கள் அடித்து துவைக்கும் பந்தில் ஒரு மனித முகம் மங்கலாக தெரிகிறது. அந்த முகம் யார்....?

அட , நம்ம இந்திய குடிமகன் தான் !

Friday, August 20, 2010

சமத்துவம்

ஒரு குட்டி கதை...

ஒரு பெரிய மீன் ஒன்று கடலின் அடிமட்டத்தில் நீந்தி வருகிறது இரை தேடி.
அதன் எதிரில் ஒரு சிறிய மீன் தென்படுகிறது.

உடனே அந்த பெரிய மீன் இதனை விழுங்க வருகிறது.

அதனை பார்த்த சிறிய மீன் பயந்து '' ஐயோ என்னை விழுங்காதே . உன்னை போலவே எனக்கும் இந்த பூமியில் வாழ சம உரிமை இருக்கிறது. என்னை கொள்ளாதே '' என கூச்சலிடுகிறது.

உடனே அந்த பெரிய மீன் '' ம்ம்...இப்போது அதற்க்கு என்ன. உன்னிடம் சமத்துவம் பேச நான் வரவில்லை. முடிந்தால் நீ என்னை விழுங்குவதென்றால் முயன்று பார்'' என்கிறது.

அந்த சிறிய மீன் 'ஆ' என வை திறந்து பெரிய மீனை சுற்றி சுற்றி வருகிறது . எவ்வளவு முயன்றும் அதனால் முடியவில்லை.

கடைசியில் ''ம்ம்.. நீயே விழுங்கிக்கொள். அதுதான் சரி'' என்று சொன்னது சிறிய மீன்.


நம்ம ஊரில் அல்ல.. நமது பூமியின் மொத்த சமத்துவம் எவ்வளவு அழகாக வெளிப்பட்டு விட்டது இந்த குட்டிக்கதையில்..

Sunday, May 2, 2010

கோபம் கொல்லாதே

கோபம் கொல்லாதே


கோபத்தை குறைப்பது எப்படி, கோபத்தைக் கட்டுபடுத்தும் வழிகள் என்னவென்று காலம் காலமாக ஞானிகளும் அறிஞர்களும் அறிவுரை சொல்லி வருகிறார்கள். எனக்கு இதற்கு எதிர்மாறாக தோன்றுகிறது.


உண்மையில் நாம் சரியான விஷயங்களுக்காக ஒரு போதும் கோபப்படுவது இல்லை . ஆகவே கோபப்பட கற்பிக்க வேண்டும். கோபம் பயில வேண்டும் என்ற எண்ணம் தான் உருவாகிறது. தனது கோபத்துக்கு தான் பொறுப்பாளி இல்லை என்று யார் பக்கமோ கைகாட்டுவதே இன்றைய வழக்கமாக இருக்கிறது. கோபத்தின் தன்மைகளை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை.


ஆயிரமாயிரம் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது நம்மிடையே கோபத்தை உருவாக்கவில்லை.
10 ,000 கோடி ஊழல் , 15000 கோடி மோசடி என்று நாளிதழ்களில் செய்திகள் நிரம்பி வருகின்றன. அதை பார்த்து கோபம் வரவில்லை. பள்ளிச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். பதின் வயது வேலைக்காரப் பெண் எரித்து கொல்லப் படுகிறாள் . சாதி திமிரில் ஒரு மனிதன் வாயில் மலம் திணிக்கப் படுகிறது. கல்லால் அடித்துக் காதலர்கள் கொள்ளப் படுகிறார்கள். கடவுளின் தோழர்கள் போல் இருந்த துறவிகள் காமக் களியாட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எதற்கும் கோபம் கொள்வதே இல்லை.


ஒரு வேலை மென் உணர்சிகள் அதிகமாகி விட்டனவா? அதுவும் நிஜம் இல்லை என்று இயல் , இசை, நாடகம் மற்றும் கிராமியக் கலைகள் பார்வையாளர்கள் இன்றி மெள்ள அழிந்து வருகிறது. நல்ல இசை . இலக்கியம் , எதையும் விரும்பி போகிறவர்கள் குறைந்து போனார்கள். கோபமும் இல்லை.. மென் உணர்சிகள் இல்லை. என்றால் மக்கள் என்னவகதான் ஆகி இருக்கிறார்கள்.


யோசித்தால் கிடைக்கும் ஒரே உண்மை.. மக்கள் மண்ணாக இருக்கிறார்கள் என்பதே.. மண்ணை பழிக்கக் கூடாது என்பார்கள். மக்கள் மனது கசடேறிய மண்ணாக மாறி இருக்கிறது. எதையும் கண்டு கொள்ளாமல் , எதற்கும் சலனம் கொள்ளாமல் பட்ட மரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நமது வாழ்கை அர்த்தமற்றுபோய் கொண்டிருக்கிறது . எதற்குமே ஏன் கோபம் வருவது இல்லை.

அகிம்சையை கற்றுக்கொடுத்த அதே காந்திதான் பிடிவாதத்தையும் கற்றுதந்தார். யார் தடுத்தாலும் எதிர்த்தாலும் பிடிவாதமாக நியாயத்தை மக்கள் உணர செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது அந்த பிடிவாதம். கோபம் தான் பிடிவாதமாக மாறி இருக்கிறது,. காந்தியின் வழிகாட்டல்கள் இன்று ஏன் கைக்கொள்ளப்படுவது இல்லை.

கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள்ளாகவே அமுக்கிவைதுக் கொள்வதை விட சிறு தீக்குச்சி போல தன்னை எரித்துக்கொண்டு வெளிச்சம் தரும் கோபம் வெளிப்பட வேண்டும். அதன் விளைவு மெள்ள விரிவு கொள்ளும். நாம் கோபம் கொள்ளவேண்டிய அதனை அநியாயங்களும் மனித அவமதிப்புகளும் கண் முன்னே நடக்கின்றன. ஆனால் அடங்கியே போகிறோம். இதற்கு மாறாக எளிய மனிதர்களிடம் அடங்கி போக வேண்டிய இடங்களில் ஆத்திரப்படுகிறோம்.

மனசாட்சியின் குரல் என்ற சொல்லையே மறந்து விட்டோம் இன்று. முன்பு மனசாட்சி நமது சரி தவறுகளை கண்காணித்த படியே இருக்கும் என்ற பயம் இருந்தது. மனசாட்சி விழித்தபடியே இருக்கிறது என்பதன் அடையாளமே சமூக கோபங்கள். அது மறையும் போது மனசாட்சியும் கூடவே மறைந்து போகிறது.

கடவுளின் இருப்பிடம் கள்வர்களின் குகையாக மாறிவிட்டதே என்று ஏசு கோபம்கொண்டு இருக்கிறார். ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் மக்கள் சண்டையிடுகிறார்களே என்று புத்தர் கோபம் கொண்டு இருக்கிறார். தன்னை அவமதித்ததைக்கூட தாங்கிக் கொள்ளும் கிருஷ்ணர் தனது தேசத்து பெண்களை அவமதித்தவனை கொல்ல கோபத்துடன் ஸ்ரீ சக்கரத்தை ஏவிவிட்ட நமது
இதிகாசங்கள் சொல்கின்றன. அநியாயத்துக்கு எதிராக கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது. தென்னாப்ரிக்காவில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கோபம் தான் காந்தியின் முதல் அறப்போராட்டம். ஆக, கோபம் எப்போதும் மாற்றதின் ஆதார விதை போன்று இருந்திருக்கிறது. அந்த கோபத்தை தான் நாம் தொலைத்து விட்டோம்.

கோபம் எளிதானது இல்லை. அதை முறையாக பிரயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தின் கடிவாளம் நம் கையில் இருக்க வேண்டும். அதன் பிடிக்குள் நாம் போய்விடக் கூடாது. அது சாத்தியமானால் நமது கோபம் ஒளிரும் வெளிச்சமாகும்.

ராமகிருஷ்ணன்
ஆனந்த விகடன்