Wednesday, November 3, 2010

அரசு ஊழியர்கள் அகால மரணம் - ஐயோ பாவம்

சென்ற வார செய்தி

பணி மிகுதியின் காரணமாக அரசு ஊழியர்கள் அகால மரணம் அடைகிறார்கள். மக்கள் நினைப்பது போல அவர்கள் வேலை வெட்டி செய்யாமல் சும்மா எல்லாம் இல்லை.

அரசு ஊழியர் சங்கம் கோவை..

அப்படியா? உங்களின் பணிமிகுதின்னா என்ன? இதுவா?

எந்த கடையில் எந்த வடை டேஸ்டா இருக்கும்

அலுவலகத்தில் மானாவாரி அரட்டை அடிக்கறது

இரட்டை அர்த்தத்தில் அலுவலகத்தில் கும்மாளமடிப்பது

போனா போகுதுன்னு ஒப்பிற்கு சில கையெழுத்து

அப்பாவி மக்களை இஸ்டத்திற்கு அலைக்கழிப்பது

இளிச்சவாயன் யாராவது மாட்டினா தமிழின் அனைத்து கெட்ட வார்த்தைகளையும் வசைமொழிகிறது (கெட்ட வார்த்தை கத்துக்கணும்ன அவங்க கிட்ட போகலாம் )

உள்ளூர் பெண் ஊழியர்கள்னா, நைட்டியோட அலுவலகம் வந்து குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட சொல்றது, (முக்கியமா விஜய் பாட்டுக்கள்)

உன் புருஷன் இவன்தான்றதுக்கு என்ன சாட்சி? குடும்ப அட்டையில் இருப்பது உன் புருஷன் தான்னு எப்படி எங்களுக்கு தெரியும்? என்பது போன்ற கொச்சை கேள்விகள் கேட்பது.

'கமிஷன்' எவன் குடுக்கரானோ அவனுக்கு முதலில் கையெழுத்து போட்டு தங்கள் கடமையில் கண்ணா இருப்பது

தங்கள் குடும்பம் , உறவு, தூரத்து உறவுக்கெல்லாம் வேலை வாங்கி வாங்கி கொடுக்கிறது

இந்த கடமைகளுக்காகவா அகால மரணம் அடையறாங்க..
எங்களுக்கெல்லாம் காது குத்தியாசுப்பா எப்பவோ..

(இக்கட்டுரை மேற்கண்ட 'பணிகளை' செய்பவர்களை மட்டுமே ..! அவர்களை நேரிலேயே பார்த்தால்... நேர்மையான உழியர்கள் இருந்தால், அவர்களை அல்ல.. )