Monday, August 30, 2010

நவ நாகரீக ஆதிமனிதன்

சாருவின் சென்ற வார 'மனம் கொத்தி பறவை' படித்து விட்டு மனம் ஒரு மாதிரி தான் ஆகி விட்டது. பல்வேறு நாடுகளின் அசைவ உணவுகள் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். சைவப்பிரியர்கள் மனதை கல்லாக்கி கொண்டு மேற்படி படியுங்கள் என்று நாய்க்கறி பற்றியும், வட மாநிலங்களில் நாய்க்கறி முக்கிய விருந்தாக பரிமாறப்படுவது பற்றியும், உலக நாடுகளில் நாய்க்கறி முக்கியமான ஒன்று எனவும், சமைக்காத பச்சை மீன் உணவுகளை ஜப்பானில் சாப்பிடுவதையும், ஏதோ ஓரிடத்தில் தான் சாப்பிட்ட தவளைக்கறியின் லெக் பீஸிற்கு சிக்கன் லெக் எல்லாம் இணையே ஆகாது எனவும் எழுதி இருந்தார்.

நான் கூட travel & living சேன்னலில் பல முறை பார்த்திருக்கிறேன். ஜப்பானோ , சீனாவோ போன்ற தோற்றத்தில் ஒரு பெண் சமையலுக்கு வருவார். அவர் ஆச்டோபஸ்ஸை அப்படி சுடு தண்ணீரில் போட்டு எடுத்து லேசாக வால்பகுதிகளை மட்டும் நீக்கி விட்டு மேசையில் கொண்டு வந்து பரிமாறுவார். அப்படியே பச்சையாக இருக்கும்.

பெரிய வண்டு போன்ற தோன்றமுடிய ஜந்து, கடல் குதிரை, தவளை, மற்றும் பூசியினங்களை அவற்றை வேக வைத்தார்களா இல்லையா என்றே தெரியாது. தோன்றம் மாறாமல் அப்படியே முள்கரண்டியை குதிக்கொண்டிருப்பர்கள். அதன் கண்கள் வெறித்து பார்ப்பதை எல்லாம் அவர்கள் சட்டை செய்வது போல இல்லை.

ஒருமுறை ஒரு ஆசாமி மேசையில் ஒரு ஆமையை கொண்டு வந்து வைத்தார். அது தன் தலை, கை, கால்களை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஓடு மட்டும் தான் தெரிந்தது. அந்த மனிதன் பள பளக்கும் கத்தியால் ஓட்டின் அடிப்பகுதியை குத்தினான். அந்த ஆமை உடனே தலையை வெளியே நீட்ட,அவன் சடார் என தலையை பிடித்து விட்டான். பிறகு அந்த கத்தியை கொண்டு தலையை வெட்ட போக.. எனக்கு அதற்கு மேல் பார்க்க முடியாமல் சேன்னலை மாற்றி விட்டேன். சிறிது நேரம் கழித்து வந்தால், அந்த ஆமை மசாலாக்களுடன் பரிமாறப்பட்டிருந்தது. ஒரு சில தட்டிக்களில் தலை, கால், ஓடுகளுடன் அப்படியே சமைத்தும் வைத்திருந்தார்கள். அதன் கண்கள் வேறு ஒரு மாதிரி இருக்க, ஓட்டை நீக்காமல் எப்படி சாப்பிடுகிறார்கள் என யோசித்துக்கொண்டிருந்தேன்.

அதேபோல மற்றொரு முறை பாம்பின் தோலை உரிந்துக்கொண்டிருந்தார்கள். போதுமடா சாமி என அந்த நிகழ்ச்சியை பார்பதையே விட்டு விட்டேன்.

நடிகை ஏஞ்சலினாவின் அழகின் ரகசியத்திற்கு காரணம் அவர் ஆப்பிரிக்காவில் இருந்து வரவழைக்கப்படும் கரப்பான் பூச்சியை சாப்பிடுவது தானாம். பத்திரிக்கை செய்தி எந்த அளவு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையிலேயே அவர் சாப்பிடுவாரோ?

சாரு சொன்னா மற்றொரு செய்தி அசைவப்பிரியர்களையே வாந்தி வரச்செய்து விடும். ஜப்பானியர்களை பார்த்து மிக அருவருப்பாகி விட்டது எனக்கு.

ஜப்பானிய வி.வி..பி.க்களுக்கு மட்டும் நடக்கும் முக்கிய விருந்து நிகழ்ச்சியை பற்றி சொல்லி இருந்தார். அந்த விருந்தில் சினையாக இருக்கும் மாட்டின் வயிற்றில் இருக்கும் 4 அல்லது 6 மாத குட்டியை வெளியே எடுத்து அதன் மேல் ஏதோ சிலவற்றை தூவி ஏதோ முறையில் சுடவைத்து அப்படியே மேசையில் கொண்டுவந்து வைத்தார்களாம். அதன் தலை ஒரு ஜப்பானிய உயர் அதிகாரிக்கு வைக்கப்பட்டதாம். அவர் அதன் மேல் ஸ்பூனை குத்த இதம் பீறிட்டு வந்திருக்கிறது. மற்ற யாவரும் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்க, நம் சாருவின் நண்பர் பொறுக்க முடியாமல் '' என சொல்லிவிட்டாராம்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்து அவர்களை தனியே அழைத்து ''நாங்கள் இதை சாப்பிட்டு என்ன செத்தா போய் விட்டோம். இந்தியர்களாகிய நீங்கள் கலாச்சாரம் கற்பு என வெறும் வாய்ப்பேச்சு பேசிக்கொண்டிருக்கிறீர்கள். நடைமுறையில் அப்படியா இருக்கிறீர்கள்'' என பொரிந்து தள்ளி இருக்கிறார்.

அவர்சொல்வது ஓரளவு உண்மையும் கூட. நாம் நாட்டில் அவை வெறும் மேடை பேச்சாக மட்டுமே இருக்கிறது.

நம் நாட்டிலும் மாடு, ஆடு, நாய், பன்றி என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை தான். சென்னையிலும் , கேரளா போகும் பாதைகளிலும் மாட்டுக்கறி சந்தைகளே உள்ளது. ஒரு முறை சென்னையில் மாடுகளை நம்மவர்கள் செய்த சித்ரவதைகளையும், கடைகளில் இருந்த ரத்த வெள்ளத்தையும், துடிக்க துடிக்க அவற்றை இழுத்து சென்றதையும் பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக போட்டுகொண்டிருந்தார்கள்.

நம் ஊரில் ஒன்றும் குறைச்சலில்லை நான் அவர்களை பார்த்து அருவருப்படைய. இருந்தாலும் பசுவாயின்றே , அதுவும் சினை, அதன் குட்டி என படித்து விட்டு இரண்டு நாட்கள் எனக்கு துக்கமே வரவில்லை.

ஒரு கவிதையை நினைத்து தேற்றிக்கொண்டேன்.

''கொல்வது பாவம் எனில்
அணில் என்ன?
எலி என்ன?''

எலிக்கு பொறி வைத்துவிட்டு அணில் மாட்டிக்கொள்ள கூடாது என பிரார்த்தித்தால் அப்போது எலி ஜீவன் இல்லையா?

ஆதிமனிதர்களுக்கும் நவ நாகரீக மனிதர்களாகிய நமக்கும் பெரிதாக வேறுபாடு ஒன்றும் இல்லை போல தான் தெரிகிறது உணவு விஷயத்தில்..

Sunday, August 29, 2010

கர்பத்திலேயே இனி கல்வி


ஜீ தமிழில் மட்டும் வரும் விளம்பரம் இது.

அந்த விளம்பரத்தில் காட்டப்படும் குழந்தைகள் 1 முதல் 2 வயதுக்குட்பட்டவை. அக்குழந்தைகளிடம் அட்டைகளில் ஏதேதோ எழுதிக்காட்டுகிறார்கள்.

அவைகளும் அதை பார்த்து ''cat .., elephant .., wave என சொல்கின்றன.

அதில் வேடிக்கை ஒரு குழந்தைக்கு இன்னும் பேசவே வரவில்லை. அதனிடமும் அட்டையில் 'hands என்று எழுதி கட்டுகிறார்கள். அது உடனே இரண்டு கைகளையும் தூக்கி ஆட்டி ஆட்டி காட்டுகிறது.

'' ....இச்சிறு குழந்தைகளும் தங்கள் வயதுக்கு மேலான நிலையில் கற்கின்றன. பேசுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கும் ''early leaning system'' ஐ அறிமுகப்படுத்தி அவர்களை வாழ்கையில் 'மேம்படுத்தி' உயர்வடையச் செய்யுங்கள் .. ''என்று வருகிறது.

அந்த குழந்தைகளை பார்க்க பாவமாக இருக்கிறது. முன்பெல்லாம் 5 வயது வரையாவது சுதந்திரம் இருந்தது குழந்தைகளுக்கு.

இப்போது அதுவும் போய் 3 வயதிலேயே பள்ளிகளில் தங்கள் குழந்தை பருவத்தை தொலைத்து விடுகிறார்கள். இந்த 3 வயது கூட பொறுக்க வில்லை போல. அப்போதிருந்தே கற்க ஆரம்பித்து வாழ்கையில் 'மேன்மை' அடைய செய்யவேண்டுமாம்.


இன்னும் கொஞ்ச நாள் போனால் இப்படியும் விளம்பரங்கள் வரலாம்..

''பெற்றோர்களே..

உங்கள் குழந்தைகள் பிறக்கும் போதே A.., B.., C.., D.., சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா..?

''mummy .. daddy '' சொல்லி கொண்டே பிறக்க வேண்டுமா..,

''mummy இதோ வந்துட்டேன் .. ''

இப்படியெல்லாம் சொல்லிக்கொண்டே பிறக்க வேண்டுமா? எங்களிடம் வாருங்கள்.

கர்ப்பத்தில் இருக்கும் போதே அக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுத்து அறிவுள்ள பிள்ளைகளாக பிறக்க வைக்கிறோம்.

பிறக்கும் போதே ''வீல்..'' என அழுது கொண்டே பிறக்கும் மற்ற சாதாரண குழந்தைகளை போல அல்லாமல் mummy , daddy ,cat .., elephant .., wave என பலவாறு சொல்ல வைக்கிறோம். (கண்டிப்பா அம்மா, அப்பா என்று சொல்ல வைக்க மாட்டோம்).

இதற்கும் பெற்றோர் படையெடுத்து சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

....கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்துட்டா அது ஜீன்ல போய் பதிஞ்சிடும். அப்புறம் மறக்கவே மறக்காது, நம்ம பிள்ளைங்க தான் இனி ஸ்கூல் பர்ஸ்ட். பின்னாடி IAS , MBBS , ENG கெல்லாம் கஷ்டப்பட தேவை இருக்காது பாரு .... , ''

என பெற்றோர்கள் ஆச்சர்யத்தோடு முன்பதிவு செய்தாலும் செய்வார்கள்.


ஏன் எனில் கர்ப்பத்திலேயே சொல்லிக்கொடுத்து விட்டால் நமக்கு இன்னும் சௌகரியம் தானே

Thursday, August 26, 2010

உலகின் மகிழ்ச்சியான நாடு எது?



கடந்த 2005 முதல் 2009 வரை 155 நாடுகளில் ஒரு சர்வதேச நிறுவனம் எடுத்த சர்வே இது. அந்த பட்டியலில் உலகிலேயே மகிழ்ச்சியான நாடு நெதர்லாந்து தான். டென்மார்க், பின்லாந்து , நார்வே, ஸ்வீடன் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நம்ம அமெரிக்கா முதல் 10 இடங்களில் கூட வரவில்லையாம்.

''பணம் மட்டும் மகிழ்ச்சியை தராது. மற்ற வசதிகள், அமைதியான சூழ்நிலைகள் தான் மகிழ்ச்சியை தரும் '' என இதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

சரி.. இந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் நிலைமை என்னவாம்?

இந்த கணக்கெடுப்பு பட்டியலில் (155 நாடுகளில்) இந்தியா இடம்பெறவே இல்லையாம் !..

அப்போ இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்று முடிவே கட்டிவிட்டார்களா ?! . அப்படியெனில் நாம் எல்லாம் சகிப்புத்தன்மை கொண்ட 'தியாகிகள்' தானே ! எப்பேர்ப்பட்ட மக்கள் நாம். !

உலகிலேயே சிறந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும், ஞாபக மறதியும் கொண்ட, மக்களை கொண்ட நாடு 'இந்தியாதான்'. ஒந்த சான்றிதழையாவது யாரேனும் கணக்கெடுத்து கொடுத்தால் தேவலை.

இன்னொன்றும் தோன்றுகிறது. இந்தியா மகிழ்ச்சியற்ற நாடு என்றால் நமது தேசப்பற்றிற்கு கோபம் வருகிறதே. நம்மை மட்டம் தட்டியது போல ஆகாதா..?

ஆனால் கண்டிப்பாக நமது நாட்டில் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் கூட்டம் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை. நமது மாண்புமிகு 'அரசியல்வாதிகள்தானே!'

ஒரு கால்பந்து மைதானத்தில் ஒரு டீம் கால்பந்து ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த அணி ப்ளேயர்கள் சோனியா, மன்மோகன் , ஜெயலலிதா, மம்தா, கருணாநிதி, லல்லு, வாஜ்பாய், அத்வானி, இப்படி போகிறது. அவர்கள் அடித்து துவைக்கும் பந்தில் ஒரு மனித முகம் மங்கலாக தெரிகிறது. அந்த முகம் யார்....?

அட , நம்ம இந்திய குடிமகன் தான் !

Friday, August 20, 2010

சமத்துவம்

ஒரு குட்டி கதை...

ஒரு பெரிய மீன் ஒன்று கடலின் அடிமட்டத்தில் நீந்தி வருகிறது இரை தேடி.
அதன் எதிரில் ஒரு சிறிய மீன் தென்படுகிறது.

உடனே அந்த பெரிய மீன் இதனை விழுங்க வருகிறது.

அதனை பார்த்த சிறிய மீன் பயந்து '' ஐயோ என்னை விழுங்காதே . உன்னை போலவே எனக்கும் இந்த பூமியில் வாழ சம உரிமை இருக்கிறது. என்னை கொள்ளாதே '' என கூச்சலிடுகிறது.

உடனே அந்த பெரிய மீன் '' ம்ம்...இப்போது அதற்க்கு என்ன. உன்னிடம் சமத்துவம் பேச நான் வரவில்லை. முடிந்தால் நீ என்னை விழுங்குவதென்றால் முயன்று பார்'' என்கிறது.

அந்த சிறிய மீன் 'ஆ' என வை திறந்து பெரிய மீனை சுற்றி சுற்றி வருகிறது . எவ்வளவு முயன்றும் அதனால் முடியவில்லை.

கடைசியில் ''ம்ம்.. நீயே விழுங்கிக்கொள். அதுதான் சரி'' என்று சொன்னது சிறிய மீன்.


நம்ம ஊரில் அல்ல.. நமது பூமியின் மொத்த சமத்துவம் எவ்வளவு அழகாக வெளிப்பட்டு விட்டது இந்த குட்டிக்கதையில்..

அரசுக்கு சில அவசியமான சட்ட ஆலோசனைகள்

இந்தியாவில் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு யாரும் டான்சே ஆடக்கூடாது என்ற சட்டம்.

நமது தொலைக்காட்சிகளில் எப்போது பார்த்தாலும் டான்ஸ் டான்ஸ் டான்ஸ்....ஜோடிகள் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். நடுவர்கள் மதிப்பெண் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். குழந்தைகளும் விட்டுவைக்கபடவில்லை. பாரதியார் ஓடி விளையாடு பாப்பா என்றுதான் பாடினார். இப்படி ஆடுவார்கள் என்று அவருக்கு தெரிந்தா இருக்கும்?!. இதில் சீசன் வைத்து வேறு கொலை செய்கிறார்கள். எந்த சேன்னல் போட்டாலும் ஆட்டம்தான். பார்க்க வேறு சேன்னல்களும் இல்லாமல் இதை பார்த்தே ஆகவேண்டியது தலை எழுத்தாக இருக்கிறது.
இப்படியே போயிட்டு இருந்தா என்னைய அர்த்தம்.. இதற்கு ஒரு முடிவே கிடையாத ?.. என மக்கள் கொதிப்படைந்து எழுவதற்குள் அரசாங்கம் இந்த சட்டத்தை கொண்டுவந்தால் நல்லது.

சினிமாவில் ஹீரோ ஒபெனிங்க சாங்கிற்கு தடை சட்டம் .


கதாநாயகர்கள் தங்களை தாங்களே புகழ்ந்து பாடி போது மக்களை வெகுவாக குழப்பி வருவதாலும், இதற்கு மேலும் புகழ்ந்து எழுத முடியாமல் கவிஞர்கள் படும் வேதனையை கருத்தில் கொண்டும் அரசாங்கம் ஹீரோ ஒபெனிங்க சாங்கிற்கு தடை சட்டம் .
இயற்ற வேண்டும்.

மதுரை, அறிவா, வெட்டு, குத்து என பீதியை கிளம்புபவர்களையும் , பஞ்சு டயலாக் பேசி பாடாய் படுத்துபவர்களையும் 6 மாதம் கடுங்காவலில் உள்ளே தள்ளும் சட்டம்

டிவி சீரியல் பார்க்கும் அம்மணிகள் தங்கள் வடிக்கும் கண்ணீரை மழை நீர் சேகரிப்பு திட்டம் போல 'கண்ணீர் சேகரிப்பு திட்டம்' போட்டு நிலத்தடிக்கு நீர் பாய்ச்சும் சட்டம்.

நிலக்கரியில் இருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ, அம்மாவுக்கும், ஐயாவுக்கும் தினமும் அறிக்கைகள் கிடைத்து விடுகின்றன. எனவே அறிக்கையில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிந்தால் நம் மின்சார பிரச்சனைகளுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கலாம். அதற்க்கான வழிகளை ஆராய விஞ்ஞானிகளுக்கு உத்தரவிடலாம்.

செல்போனில் பேசும் டீநேஜ் பெண்கள் மிகவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொள்வதால் அருகில் இருப்போர் காதை தீட்டினாலும் ஒன்றும் கேட்பதில்லையாம். அவர்கள் வாய் பேசுவது மூக்கிற்கே கேட்காதவாறு முனகுவதால் 'முனகல் தடைச் சட்டம்' பாய்ச்சலாம்.

ஆடை விளம்பரங்களில் எப்போது பார்த்தாலும் பெண்களே கூடி கும்பி அடிப்பதால் ஆண்கள் பாதுகாப்பு அமைப்புகள் கவலையில் உள்ளனராம். அவர்களை வெத்துவேட்டாக காட்டி விடுகிறார்களாம் . ஆகவே அவர்களுக்கும் ஆடை விளம்பரகளில் சம உரிமை அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தலாம்.

Monday, August 2, 2010

எழுத்து எப்போது மனதை தைக்கும்..

என்னுடைய மரணம்

என்னிடமே உள்ளது

அதை நான்

உணராவிட்டாலும்

என்னிடம்தான் இருக்கிறது

அதை கண்டு

நான் பயப்படவும்

வேண்டியது இல்லை

ஏற்கனவே வந்து விட்டதை

இனி மேல் வரப்போவதாக எண்ணி

பயப்படுவது முட்டாள் தனம்

அல்லவா?

நான் படித்துகொண்டு இருக்கிற


ஆனால் இன்னமும்

முடிக்காத புத்தகத்தின்

கடைசி பக்கத்தை

போன்றது அது !