Monday, July 26, 2010

மனம் மயக்கும் ராகம்


''சொர்க்கம் மதுவிலே.. '' கமல் படப்பாடல். எனக்கு அந்த வீடியோ கிடைக்கவில்லை.
http://www.youtube.com/watch?v=SWw2yhqa7VI&feature=related
என்ன அருமையான பாடல் இது. மனதை மயக்கும் ராகம். மனதை மயக்கும் இசை. கர்நாடிக் தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன். இது என்ன ராகம் என்று. பாடல் ஆரம்பித்து முடியும் வரை மனம் எண்ண ஓட்டத்தை நிறுத்தி ராகத்திற்கு மயங்கி மகுடி ஆடத் தொடங்கி விடுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்தினால் ஏற்படும் மயக்க நிலை. ராகம் என்னவென்று தெரிந்தால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இறைவனுக்கும் இசைக்குமான தொடர்பு தன் என்ன அற்புதமானது. அதனால் தான் நம் முன்னோர்கள் இசையின் மூலமே இறைவனை ஆராத்தித்துள்ளனர். இறைவனுக்கும் இசைக்குமான தொடர்பை, இசைக்கு நம் மனம் மயங்கி விடும் போது உணர முடிகிறது. சில ராகங்கள் நம் ஆன்மாவை தட்டி எழுப்புகிறது. அல்லது நம் ஆன்மா அதனோடு ஒன்றி விடுகிறது. ஆதி நிலையை சில கணநேரங்கள் உணர்த்துகிறது. கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கும். எல்லோருக்கும் எல்லா ரகங்களும் பிடிப்பது இல்லை.
சிலருக்கு பிடிப்பது சிலரை கவர்வது இல்லை. நம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது நாம் கேட்ட ராகமே நமக்கு எப்போதும் பிடித்ததாக இருக்கும்.அது எப்போதும் அழியாத ஒன்று. முன்பு ஒருமுறை கல்கியில் படித்த நிஜ சம்பவம் இது.

ஒரு கர்பிணிப்பெண் எப்போதும் கர்நாடிக் இசை கேட்டுகொண்டே இருக்கிறாள். தனக்கு பிறக்கும் குழந்தை இசைக்குழந்தையாக இருக்க வேண்டும் என்பது அவர்கள் ஆசை. எப்போதும் வீட்டில் இசைமழை தான். அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. சிலமாதங்கள் கடந்து ஒரு நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் தொலைக்கட்சியில் ஒரு கர்நாடிக் படலை பார்த்துகொண்டிருந்தார்கள். அந்த குழந்தையின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர். அந்த குழந்தை ஆனந்தமாக தன்னை மறந்து அந்த ராகத்தோடு லயித்து விட்டிருந்தது.

மெய்மறந்து இசையை கேட்பது ஒரு தவம். கோயில் மணிகளின் ஓசையை கேட்டுப்பாருங்கள். 'டண் டண்' என்ற ஒலி நம்மை ஏதோ செய்யும். நமக்கு எதையோ உணர்த்த முயல்வது போல இருக்கும். நம் மனம் அந்த ஒலியையே சுற்றி சுற்றி வரும். கூர்ந்து நோக்கினால் அந்த ஒலி பிரபஞ்சத்தின் சாரமாகவே இருக்கும்.
இசைக்கு மயங்காத மனிதர்கள் யாரும் இல்லை. இந்த பரபரப்பான நரக வாழ்கையில் இருந்து இசை மட்டுமே நம்மை அடையாளப்படுதுகிறது. மனம் தன் தொடர் ஓட்டத்தை நிறுத்தி தன்னை அடையாளம் காண முயற்சிக்கிறது சில கணநேரங்களுக்கு.இந்த பாடலின் வரிகளும் காட்சிகளும் எப்படியோ இருந்தாலும் ராகம் அற்புதமானது. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Tuesday, July 13, 2010

செம்மொழியும் சோப்புக் கம்பெனிகளும்



செம்மொழி மாநாட்டில் அரங்கேறிய பல நகைச்சுவைக் கட்சிகளில் சில...


கிளம்பிற்று காண் ஜால்ரா கூட்டம்.

''செம்மொழி தங்கமே!
எங்கள் செல்ல சிங்கமே!
உன்னை கும்பிட்டால்
ஊரையே கும்பிட்ட மாதிரி ''
என ஆரம்பித்து வைத்தார் வைரமுத்து.


"கலைஞரின் கபாலக் களஞ்சியத்தில் ஆண் எண்ணங்களை விட ஈரப்பெண் எண்ணங்களே அதிகம். இல்லாவிட்டால் கோபால புர வீட்டை கொடையாக தர முடியுமா? அந்த ஔவையார் காலத்தில் இவர் இருந்திருந்தால் அதியமான் ஏமாந்திருப்பான் '' என்றெல்லாம் கவிதை மழை பொழிந்தது ஈரோடு தமிழன்பன்.

பாடலாசிரியர் விவேகா '' தலைவா, நீ சாக விளக்கு, விதி விலக்கு, அகல் விளக்கு, அகலா விளக்கு. சென்னைக்கு தெற்கே உள்ள திருக்குவளையில் தான் தமிழுக்கு கிழக்கு பிறந்தது'' என கண்டுபிடித்து சொன்னார்.

இதையெல்லாம் பார்த்த வாலி சும்மா விடுவாரா..
''காற்றே கலைஞர் புகழ் பாடி திரி'' என ஆணையிட்டார்.


'' கலைஞரை முத்தமிழ் என்று சொன்னால் நான் முரண்படுவேன். அவர் மொத்த தமிழ். வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை கலைஞர் '' என புகழ் படி பொழிந்தார் பழனி பாரதி.

''82 வயது மறைத்த இளைஞனே,
கலைஞரில் இருக்கிறார் கடவுள்.
108 வடிவில் காப்பது கலைஞர் தானே!''
என தன் பணியை செவ்வனே முடித்தார் பா.விஜய் .


இன்னொரு பாடலாசிரியர் கவிதை
''உலகத்துக்கு ஒரு ஐ.நா.; உலகத் தமிழர்க்கு நீ நைனா''


மற்றொரு பாடலாசிரியர்..
''பெண்கள் என்றால் என் நினைவுக்கு வந்தது பிராந்தி பாட்டில்.
இப்போது நினைவுக்கு வருவது பிரதீபா பாட்டீல்''
(என்ன கொடுமை இது)

கவிஞரே உமது கவிதையின் அர்த்தம் மட்டும் பிரதீபா பாட்டீலுக்கு புரிந்திருந்தால் உம்மை பாட்டிலாலேயே ஒரு போடு போட்டிருப்பார். இதை எல்லாம் கேட்பது நமது தலையெழுத்து.


எல்லாவற்றிற்கும் மேலாக வைரமுத்து சொல்லியிருப்பது தான் மனதை மிகவும் தைக்ககூடியது.

''கலைஞர் காப்பீட்டு
திட்டத்தில்
உழவன் சேர்ந்தான்,
உழைப்பாளி சேர்ந்தான்.
அன்னதாய் சேர்ந்தாள்,
பொன்னுத்தாய் சேர்ந்தாள்.
சேராத ஒரே தாய் தமிழ் தாய் '' என.

தமிழை நலிவடைந்தோர் பட்டியலில் சேர்த்து கலைஞரை சரண்புக சொல்கிறார்.
தமிழ் தாயே உன் தரம் இவ்வளவு தாழ்ந்து விட்டதா. என்ன கொடுமையான வரிகள். இவருடைய கவிதைகளை நானும் ரசித்தேன் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் தலைப்புகள் வைத்தால் வரிச் சலுகை என்றும், தமிழ்நாட்டு கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை அறிவிப்பால் தமிழ் வளரும் என்றும் நினைப்பது கேலிக்கூத்து. இத்தனை கண்காணிக்க காவல்துறை தடி எடுத்துக்கொண்டு (தொலைக்காட்சி கேமராக்கள் பின் தொடர) கிளம்புவது அதைவிட பெரிய கேலிக்கூத்து. கவிஞர்களே உங்கள் கவிதைகளை ரசிக்கிறோம். கொண்டாடுகிறோம். இந்த மாதிரி கன்றாவிகளை அல்ல. கலைஞரால் எப்படி இவற்றை காது கொடுத்து கேட்கமுடிகிறது என்று தெரியவில்லை.