Sunday, May 16, 2010

என்ன கொடுமை சார் இது?

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு தி.மு.கவில் இணைந்தார்.

கருணாநிதி: பெரியார் என்ற படத்தில் குஷ்பு மணியம்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை நன்கு உணர்ந்து வைத்திருப்பதினால் தான் அவரால் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க முடிந்தது. அந்த வகையில் குஷ்பு பாராட்டுக்கு உரியவர். இதன்மூலம் பெரியாரின் மீதும் திராவிடத்தின் மீதும் (?) அவருக்கு உள்ள பற்று நன்கு தெளிவாகிறது. குஷ்பு தி.மு.கவில் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

குஷ்பு : எனது கொள்கைகளும் (?) தி.மு.கவின் கொள்கைகளும் ஒத்திருக்கின்றன. அதனால் தி.மு.கவில் இணைகிறேன்.

--

குஷ்பு தி.மு.கவில் இணைவது இருக்கட்டும். அவருக்கு அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் இருக்கின்றதா.?
அவருடன் ஒரு மினி பேட்டி

கேள்வி 1 : நீங்கள் தமிழ் பெண்ணா?
குஷ்பு: இல்லை. மும்பை.

(ஆஹா , இதுதான் முக்கிய தகுதியே. வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வந்தார் வாழலாம். வாழ்ந்தபின் பொழுது போகலன்னா அரசியலுக்கும் வரலாம். யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. சொந்த மாநில மக்கள் வந்தாதான் இங்கு கேள்விகள் ஆயிரம். வேறு மாநிலத்தவருக்கு அந்த பிரச்சனையே இல்லை. தமிழர் அல்லாதோருக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரஜினியை எவ்வளவோ முயற்சித்தார்கள். அவருக்கு கொடுப்பினை இல்லை. நீங்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டீர்கள்)

கேள்வி 2 : திராவிடம்னா என்னனு தெரியுமா?..
குஷ்பு: திராவிடம்.. whats that ? அது எந்த கடையில விக்கிது

(கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு பல வருடங்கள் குப்பை கொட்டுபவர்களுக்கே தெரியாத விஷயம். இவருக்கு மட்டும் எப்படி தெரியும். புரியாத ஒன்னை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு விட்டுவிடுங்கள். அரசியலுக்கு வர இது முக்கியமா தெரியாம இருக்கணும். ஆனால் வரும் காலங்களில் திராவிடம் என்ற வார்த்தையை குஷ்பு அதிகம் பயன் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.)

கேள்வி 3 : உங்களுக்கு தமிழ் தெரியுமா?
குஷ்பு: தமிள் ?

(வேண்டாம் வேண்டாம் இதுக்குமேல எந்த தகுதியும் தேவையே இல்லை. ஏற்கனவே நீங்க ஒரு பாராட்டு விழால பேசின தமிழை கேட்டு இதயம் வெடிக்காம இருக்கும் கூட்டம் நாங்க. அந்த கொஞ்சும் தமிழ கேட்டுத்தான் கருணாநிதி உங்கள கட்சியில சேர்த்துட்டார் போல. கோவில் கட்டின கூட்டம், இட்லிக்கு பேர் வச்ச கூட்டம் உங்களுக்கு சி.எம்.சீட் தர மாட்டமா? 2021 இல் நீங்க தான் சி.எம்.)

கேள்வி 4 : பெரியார்ன யாருன்னு தெரியுமா?
குஷ்பு: சத்யராஜ். என்னா பெரியார் படத்தில் அந்த கேரக்டரை அவர் தான் பண்ணார்.

(நோ கமெண்ட்ஸ்)

தமிழர்களே, இதிலிருந்து குஷ்புவுக்கு அரசியலுக்கு வர அனைத்து தகுதிகளும் இருப்பது நன்கு தெளிவாகிறது. தமிழனின் தலையெழுத்து அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்.

மற்றொரு காட்சி..
ஈழத்தமிழன்: அய்யா, எங்களுக்கு உதவி பண்ணுங்கயா. ஈழத்துல நாங்க தெனம் தெனம் செத்துட்டு இருக்கம். பெண்டு பிள்ளைகள் சோத்துக்கு வழி இல்லாம கிடக்காங்க. வாழ வழி இல்லாம நிக்கறம்யா. ஏதாவது வழிசெயுங்கய்யா .

கருணாநிதி: யார் நீ?

ஈழத்தமிழன்:ஈழத்தமிழன்யா.. தொப்புள்கொடி உறவுய்யா நாம..

கருணாநிதி: அதான் யாருன்னு கேட்டேன்.
ஏய்யா, குஷ்பூ வந்துட்டு போய் இருக்காங்க. அத பத்தி பேசாம, ஈழம், பட்டினின்னுட்டு. போய்யா.. போய் வேலயப்பாரு. உன்ன யார் உள்ள விட்டது. ஹலோ செக்யூரிட்டி..

தமிழர்களே இன்றைய ஈழத்தமிழனின் நிலை இதுதான்..

ச்சே.ச்சே.. நாம் ஏன் இதை பத்தி எல்லாம் சிந்திக்கிறோம். கூடாது கூடாது.
குஷ்பூ வந்துட்டாங்க. இனி அடுத்த பாராட்டு விழாவுக்கு ரெடி ஆகணும். ராவணன் வேற ரிலீஸ் ஆகுது. செம்மொழி மாநாடு இருக்கு. நமிதாவுக்கு கோவில் காட்ட அடிக்கல் நடக்குது . அதை கவனிக்கணும். ஈழனாவது தமிழனாவது.. போய் வேலைய பாருங்கய்யா..

என்ன கொடுமை சார் இது?

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு தி.மு.கவில் இணைந்தார்.

கருணாநிதி: பெரியார் என்ற படத்தில் குஷ்பு மணியம்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பெரியாரின் கொள்கைகளை நன்கு உணர்ந்து வைத்திருப்பதினால் தான் அவரால் அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்க முடிந்தது. அந்த வகையில் குஷ்பு பாராட்டுக்கு உரியவர். இதன்மூலம் பெரியாரின் மீதும் திராவிடத்தின் மீதும் (?) அவருக்கு உள்ள பற்று நன்கு தெளிவாகிறது. குஷ்பு தி.மு.கவில் இணைவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

குஷ்பு : எனது கொள்கைகளும் (?) தி.மு.கவின் கொள்கைகளும் ஒத்திருக்கின்றன. அதனால் தி.மு.கவில் இணைகிறேன்.

--

குஷ்பு தி.மு.கவில் இணைவது இருக்கட்டும். அவருக்கு அரசியலுக்கு வருவதற்கான தகுதிகள் இருக்கின்றதா.?
அவருடன் ஒரு மினி பேட்டி

கேள்வி 1 : நீங்கள் தமிழ் பெண்ணா?
குஷ்பு: இல்லை. மும்பை.

(ஆஹா , இதுதான் முக்கிய தகுதியே. வந்தாரை வாழவைக்கும் தமிழகம். வந்தார் வாழலாம். வாழ்ந்தபின் பொழுது போகலன்னா அரசியலுக்கும் வரலாம். யாரும் எதுவும் கேட்கப்போவதில்லை. சொந்த மாநில மக்கள் வந்தாதான் இங்கு கேள்விகள் ஆயிரம். வேறு மாநிலத்தவருக்கு அந்த பிரச்சனையே இல்லை. தமிழர் அல்லாதோருக்கு இங்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரஜினியை எவ்வளவோ முயற்சித்தார்கள். அவருக்கு கொடுப்பினை இல்லை. நீங்கள் காற்றுள்ளபோதே தூற்றிக்கொண்டீர்கள்)

கேள்வி 2 : திராவிடம்னா என்னனு தெரியுமா?..
குஷ்பு: திராவிடம்.. whats that ? அது எந்த கடையில விக்கிது

(கண்டிப்பா தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கு பல வருடங்கள் குப்பை கொட்டுபவர்களுக்கே தெரியாத விஷயம். இவருக்கு மட்டும் எப்படி தெரியும். புரியாத ஒன்னை தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு விட்டுவிடுங்கள். அரசியலுக்கு வர இது முக்கியமா தெரியாம இருக்கணும். ஆனால் வரும் காலங்களில் திராவிடம் என்ற வார்த்தையை குஷ்பு அதிகம் பயன் படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.)

கேள்வி 3 : உங்களுக்கு தமிழ் தெரியுமா?
குஷ்பு: தமிள் ?

(வேண்டாம் வேண்டாம் இதுக்குமேல எந்த தகுதியும் தேவையே இல்லை. ஏற்கனவே நீங்க ஒரு பாராட்டு விழால பேசின தமிழை கேட்டு இதயம் வெடிக்காம இருக்கும் கூட்டம் நாங்க. அந்த கொஞ்சும் தமிழ கேட்டுத்தான் கருணாநிதி உங்கள கட்சியில சேர்த்துட்டார் போல. கோவில் கட்டின கூட்டம், இட்லிக்கு பேர் வச்ச கூட்டம் உங்களுக்கு சி.எம்.சீட் தர மாட்டமா? 2021 இல் நீங்க தான் சி.எம்.)

கேள்வி 4 : பெரியார்ன யாருன்னு தெரியுமா?
குஷ்பு: சத்யராஜ். என்னா பெரியார் படத்தில் அந்த கேரக்டரை அவர் தான் பண்ணார்.

(நோ கமெண்ட்ஸ்)

தமிழர்களே, இதிலிருந்து குஷ்புவுக்கு அரசியலுக்கு வர அனைத்து தகுதிகளும் இருப்பது நன்கு தெளிவாகிறது. தமிழனின் தலையெழுத்து அதுவென்றால் யார் என்ன செய்ய முடியும்.

மற்றொரு காட்சி..
ஈழத்தமிழன்: அய்யா, எங்களுக்கு உதவி பண்ணுங்கயா. ஈழத்துல நாங்க தெனம் தெனம் செத்துட்டு இருக்கம். பெண்டு பிள்ளைகள் சோத்துக்கு வழி இல்லாம கிடக்காங்க. வாழ வழி இல்லாம நிக்கறம்யா. ஏதாவது வழிசெயுங்கய்யா .

கருணாநிதி: யார் நீ?

ஈழத்தமிழன்:ஈழத்தமிழன்யா.. தொப்புள்கொடி உறவுய்யா நாம..

கருணாநிதி: அதான் யாருன்னு கேட்டேன்.
ஏய்யா, குஷ்பூ வந்துட்டு போய் இருக்காங்க. அத பத்தி பேசாம, ஈழம், பட்டினின்னுட்டு. போய்யா.. போய் வேலயப்பாரு. உன்ன யார் உள்ள விட்டது. ஹலோ செக்யூரிட்டி..

தமிழர்களே இன்றைய ஈழத்தமிழனின் நிலை இதுதான்..

ச்சே.ச்சே.. நாம் ஏன் இதை பத்தி எல்லாம் சிந்திக்கிறோம். கூடாது கூடாது.
குஷ்பூ வந்துட்டாங்க. இனி அடுத்த பாராட்டு விழாவுக்கு ரெடி ஆகணும். ராவணன் வேற ரிலீஸ் ஆகுது. செம்மொழி மாநாடு இருக்கு. நமிதாவுக்கு கோவில் கட்ட அடிக்கல் நடக்குது . அதை கவனிக்கணும். ஈழனாவது தமிழனாவது.. போய் வேலைய பாருங்கய்யா..

Thursday, May 13, 2010

நாங்கள் அரசியல் வாதிகள்

நல்ல உள்ளமும் ஞாபக மறதியும் படைத்த பொது மக்களே!

நாங்கள் உங்களை வணங்குகிறோம். தெய்வம் வரம் கொடுப்பது போல நீங்கள் எங்களுக்கு பதவி கொடுப்பதால் .

நாங்கள் என்றென்றும் உங்களுக்கு கடமைப்பட்டு இருக்கிறோம்.

''அறத்தை மற
பொருளை கொடு
இன்பத்தை அனுபவி''

இதுதான் எங்கள் கொள்கை

எங்கள் தலையாய கடமைகளில் முக்கியமானது.. எங்களுக்கு நாங்களே பட்டமும் பாராட்டு விழாவும் நடத்திக்கொள்வது.

அன்று அப்படி இருந்தவன இன்று இப்படி என்று நீங்கள் ஆராய கூடாது.

எதிர் கட்சிகளை கண்ட மேனிக்கு தூற்றுவோம். ஆனால் அடுத்த தேர்தலில் அவர்களை கட்டியணைத்து வாக்கு கேட்போம்.

இதையும் நீங்கள் ஆராய கூடாது.

எல்லாம் உங்கள் நன்மைக்கே. நாங்கள் வெறும் தியாகிகள்.

நாங்கள் வரும் வரும் என்று சொல்கிற நல்வாழ்வு ஏதோ ஒரு நுற்றாண்டில் ஏதோ ஒரு தலைமுறையில் வரும். அப்போது நீங்கள் எங்களாலதான் வந்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டும்.

ஊழல் ஊழல் என்று கூச்சல் போடுகிறார்களே. எந்த நாட்டில் இல்லை ஊழல். சீனாவில் இல்லையா? ஜப்பானில் இல்லையா? ஊழல் என்பது பாரம்பரியமாக இருந்து வருகின்ற மரபு. நாங்கள் அந்த மரபைகட்டி காக்கிறோம்.

நாங்கள் ஆஸ்திரேலியா அமெரிக்க டூர் போவதையும் தனி விமானங்களில் பயணம் செய்வதையும் நீங்கள் கணக்கு கேட்க கூடாது.

குடும்ப கணக்கு ரகசியங்களை ஆராய்வது அரசியலுக்கு அழகல்ல.

அதே போல் எங்களுக்கு பிடிக்காத ஒன்று திராவிடம் பற்றி கேள்வி கேட்பது.

ஏனெனில் எங்களுக்கே அது என்னவென்று தெரியாது. எங்கள் முன்னோர்கள் சொன்னதை நாங்கள் வழிமொழிகிறோம். அவர்களுக்கே அதுபற்றி தெரியாது என்பது வேறு விஷயம்.

பகுத்தறிவு பேசுவோம். திராவிடம் பேசுவோம். பார்பனியம் எதிர்ப்போம். ஆனால் காலம் மாறும் போது இவற்றுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நடந்துகொள்வோம்.

நமது அரசியல் சட்டம் மிகவும் பரவலானது. ஒரு அரசியல் வாதிக்கோ அவன் பதவி வகிப்பதற்கோ இன்னின்ன தகுதிகள் வேண்டும் என்று அது கட்டாயப்படுத்தவில்லை.

அந்த வகையில் நாங்கள் பாக்கிய சாலிகள்.

இவனுக்கு ஏது இவ்வளவு பணம் என்று நீங்கள் ஆச்சர்யப்படக்கூடாது.

எல்லாம் உங்கள் தயவு.

நதி மூலம் , ரிஷிமூலம், அரசியல்வாதி மூலம் இம்மொன்றும் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை.

நாங்கள் சேர்க்கும் பணம் பொது மக்களாகிய உங்களுக்கே அல்லாமல் எங்களுக்காக அல்ல.

நிலக்கரியில் இருந்து மின்சாரம் கிடைக்கிறதோ இல்லையோ எங்களுக்கு தினமும் அறிக்கைகள் கிடைத்து விடும்.

குடும்ப அரசியல் நடத்துகிறோம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் தியாகிகள். மக்களுக்காக குடும்பத்தோடு உழைக்கிறோம். உழைத்துக்கொண்டே இருப்போம். இதில் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.

சொந்த மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட போது அதை சகிக்க முடியாமல் A.C., பேன் போட்டு அரைநாள் உண்ணாவிரதம் இருந்த தியாகிகள் நாங்கள்.

நாடாளுமன்றத்தில் எங்கள் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்பதில்லை என்கிறார்கள்.

இங்குதான் நீங்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவேண்டும். உண்மையில் எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதல்ல.

நாங்கள் தமிழை நேசிக்கிறோம். தமிழ் தவிர வேறு மொழிப்பற்று இல்லை என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வரைமுறை கிடையாது. அவர்கள் தமிழ் தவிர எந்த மொழி வேண்டுமானாலும் படிக்கலாம்

நாங்கள் எங்களையும் நீங்கள் எங்களையும் காப்பாற்றுவதற்கு உருவானதே ஜனநாயகம். ஜனநாயகம் பற்றி யார் என்ன விளக்கம் சொன்னாலும் என்றுக் கொள்ளாதீர்கள் . எங்களை நம்பிய பிறகு நீங்கள் மற்றவர்களை நம்புவதே மடத்தனம்.

நீங்கள் மக்குகளாக இருக்கிற வரையில் தான் நாங்கள் பிழைப்பு நடத்த முடியும்.

ஏழை மக்களே! இதயத்தில் கைவைத்து சொல்கிறோம். நாங்கள் உங்கள் தொண்டர்கள்.

நீங்கள் தலையால் இடும் வேலைகளை நாங்கள் காலால் உதைத்து; மன்னிக்கவும். நாக்கு குழறி விட்டது.
நீங்கள் காலால் இடும் வேலைகளை தலையால் உழைக்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறோம்.

மன்னிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. பாராட்டு விழாவுக்கு போகவேண்டிய முக்கிய காரியத்தினால் இதோடு முடித்துக்கொள்கிறேன்.

ஆகவே எந்த நேரத்திலும் எங்களுக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

அதற்க்கு முன் பார்சல்கள் நாங்கள் ஒவ்வொருத்தர் வீட்டிற்கும் அனுப்பி விடுவோம்.

மறவாதீர்கள் நரிக்குட்டி சின்னத்தை!

நரிக்குட்டி ஏழைகளின் பணப்பெட்டி !

வாழ்க நாங்கள் ! வாழ்க நாங்கள் !

இப்படிக்கு

ஜனநாயகம் மறவாத அரசியல்வாதிகள்.

Sunday, May 2, 2010

கோபம் கொல்லாதே

கோபம் கொல்லாதே


கோபத்தை குறைப்பது எப்படி, கோபத்தைக் கட்டுபடுத்தும் வழிகள் என்னவென்று காலம் காலமாக ஞானிகளும் அறிஞர்களும் அறிவுரை சொல்லி வருகிறார்கள். எனக்கு இதற்கு எதிர்மாறாக தோன்றுகிறது.


உண்மையில் நாம் சரியான விஷயங்களுக்காக ஒரு போதும் கோபப்படுவது இல்லை . ஆகவே கோபப்பட கற்பிக்க வேண்டும். கோபம் பயில வேண்டும் என்ற எண்ணம் தான் உருவாகிறது. தனது கோபத்துக்கு தான் பொறுப்பாளி இல்லை என்று யார் பக்கமோ கைகாட்டுவதே இன்றைய வழக்கமாக இருக்கிறது. கோபத்தின் தன்மைகளை நாம் கற்றுக்கொள்ளவே இல்லை.


ஆயிரமாயிரம் மக்கள் இலங்கையில் கொல்லப்பட்டார்கள். அது நம்மிடையே கோபத்தை உருவாக்கவில்லை.
10 ,000 கோடி ஊழல் , 15000 கோடி மோசடி என்று நாளிதழ்களில் செய்திகள் நிரம்பி வருகின்றன. அதை பார்த்து கோபம் வரவில்லை. பள்ளிச் சிறுமி கற்பழிக்கப்படுகிறாள். பதின் வயது வேலைக்காரப் பெண் எரித்து கொல்லப் படுகிறாள் . சாதி திமிரில் ஒரு மனிதன் வாயில் மலம் திணிக்கப் படுகிறது. கல்லால் அடித்துக் காதலர்கள் கொள்ளப் படுகிறார்கள். கடவுளின் தோழர்கள் போல் இருந்த துறவிகள் காமக் களியாட்டம் நடத்துகிறார்கள். மக்கள் எதற்கும் கோபம் கொள்வதே இல்லை.


ஒரு வேலை மென் உணர்சிகள் அதிகமாகி விட்டனவா? அதுவும் நிஜம் இல்லை என்று இயல் , இசை, நாடகம் மற்றும் கிராமியக் கலைகள் பார்வையாளர்கள் இன்றி மெள்ள அழிந்து வருகிறது. நல்ல இசை . இலக்கியம் , எதையும் விரும்பி போகிறவர்கள் குறைந்து போனார்கள். கோபமும் இல்லை.. மென் உணர்சிகள் இல்லை. என்றால் மக்கள் என்னவகதான் ஆகி இருக்கிறார்கள்.


யோசித்தால் கிடைக்கும் ஒரே உண்மை.. மக்கள் மண்ணாக இருக்கிறார்கள் என்பதே.. மண்ணை பழிக்கக் கூடாது என்பார்கள். மக்கள் மனது கசடேறிய மண்ணாக மாறி இருக்கிறது. எதையும் கண்டு கொள்ளாமல் , எதற்கும் சலனம் கொள்ளாமல் பட்ட மரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நமது வாழ்கை அர்த்தமற்றுபோய் கொண்டிருக்கிறது . எதற்குமே ஏன் கோபம் வருவது இல்லை.

அகிம்சையை கற்றுக்கொடுத்த அதே காந்திதான் பிடிவாதத்தையும் கற்றுதந்தார். யார் தடுத்தாலும் எதிர்த்தாலும் பிடிவாதமாக நியாயத்தை மக்கள் உணர செய்திருக்கிறார். எங்கிருந்து வந்தது அந்த பிடிவாதம். கோபம் தான் பிடிவாதமாக மாறி இருக்கிறது,. காந்தியின் வழிகாட்டல்கள் இன்று ஏன் கைக்கொள்ளப்படுவது இல்லை.

கோபத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமக்குள்ளாகவே அமுக்கிவைதுக் கொள்வதை விட சிறு தீக்குச்சி போல தன்னை எரித்துக்கொண்டு வெளிச்சம் தரும் கோபம் வெளிப்பட வேண்டும். அதன் விளைவு மெள்ள விரிவு கொள்ளும். நாம் கோபம் கொள்ளவேண்டிய அதனை அநியாயங்களும் மனித அவமதிப்புகளும் கண் முன்னே நடக்கின்றன. ஆனால் அடங்கியே போகிறோம். இதற்கு மாறாக எளிய மனிதர்களிடம் அடங்கி போக வேண்டிய இடங்களில் ஆத்திரப்படுகிறோம்.

மனசாட்சியின் குரல் என்ற சொல்லையே மறந்து விட்டோம் இன்று. முன்பு மனசாட்சி நமது சரி தவறுகளை கண்காணித்த படியே இருக்கும் என்ற பயம் இருந்தது. மனசாட்சி விழித்தபடியே இருக்கிறது என்பதன் அடையாளமே சமூக கோபங்கள். அது மறையும் போது மனசாட்சியும் கூடவே மறைந்து போகிறது.

கடவுளின் இருப்பிடம் கள்வர்களின் குகையாக மாறிவிட்டதே என்று ஏசு கோபம்கொண்டு இருக்கிறார். ஆற்று நீரை பகிர்ந்து கொள்வதில் மக்கள் சண்டையிடுகிறார்களே என்று புத்தர் கோபம் கொண்டு இருக்கிறார். தன்னை அவமதித்ததைக்கூட தாங்கிக் கொள்ளும் கிருஷ்ணர் தனது தேசத்து பெண்களை அவமதித்தவனை கொல்ல கோபத்துடன் ஸ்ரீ சக்கரத்தை ஏவிவிட்ட நமது
இதிகாசங்கள் சொல்கின்றன. அநியாயத்துக்கு எதிராக கண்ணகியின் கோபம் மதுரையை எரித்தது. தென்னாப்ரிக்காவில் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட கோபம் தான் காந்தியின் முதல் அறப்போராட்டம். ஆக, கோபம் எப்போதும் மாற்றதின் ஆதார விதை போன்று இருந்திருக்கிறது. அந்த கோபத்தை தான் நாம் தொலைத்து விட்டோம்.

கோபம் எளிதானது இல்லை. அதை முறையாக பிரயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தின் கடிவாளம் நம் கையில் இருக்க வேண்டும். அதன் பிடிக்குள் நாம் போய்விடக் கூடாது. அது சாத்தியமானால் நமது கோபம் ஒளிரும் வெளிச்சமாகும்.

ராமகிருஷ்ணன்
ஆனந்த விகடன்

நட்டக்கல்லும் பேசுமோ

நட்டக்கல்லை தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கரிச்சுவை அறியுமோ